Tuesday, May 22, 2012

தீப்பிடிக்க ...தீப்பிடிக்க நானோ காருடா ...!




வந்த புதிதில் ஒரு லட்சம் ரூபாய் கார் என்ற பட்டத்துடன் இந்திய கார் சந்தையில் புகுந்து நடுத்தர மக்களின் மனதில் தீப்பிடிக்க வைத்த நானோ கார் இப்போதெல்லாம் அதுவே தீப்பிடித்து செய்தியாகிக்கொண்டிருக்கிறது.

ஒரு உண்மை சம்பவம்:

நானோ எரிவதுப்பற்றி சில செய்திகள் படித்திருந்தாலும் ஒரு பதிவு போடலாமா வேண்டாமா என தயக்கம் இருந்துக்கொண்டே இருந்தது, சமீபத்தில் கேபிள் சங்கரின் பதிவில் ,வெங்கி என்கிற இம்சை என அறியப்படும் மூத்தப்பதிவரின் நானோ எரிந்து விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டிருப்பதையும்,வெங்கி மயிரிழையில் தப்பியதையும் பகிர்ந்துக்கொண்டார், அதனைப்பார்த்த பின்னரே பதிவு போட்டால் தப்பில்லை,நாலு பேருக்கு விழிப்புணர்வு ஏற்படும் எனப்போட்டாச்சு.

மேலும் விபத்திற்காக இழப்பீடு கேட்டு டாடா மோட்டாரிடம் விண்ணப்பித்தும் கிடப்பில் இருக்கிறது ,என்றும் "கேட்டால் கிடைக்கும்" என்ற அவர்களின் அமைப்பின் மூலம் அனைவரும் டாடா மோட்டார் முகநூலில் கேட்கவும் சொல்லி இருக்கிறார்.

செய்தியுடன் கூடியப்புகைப்படம்:


வெங்கியின் முகநூல் பக்கம்:


கேட்டால் கிடைக்கும் விவரங்களுக்கு:

நானோ கார் தீப்பிடிக்க என்ன காரணம் , கட்டமைப்பில் உள்ள கோளாறு, அதன் குறை நிறைகளையும் ,கொடுக்கும் காசுக்கேற்ற தரமான காரா என அலசுவதே இப்பதிவின் நோக்கம்.

நிறைகள்:

*விலை மலிவானது என சொல்லப்படுகிறது ஆனால் அப்படியல்ல கொஞ்சம் வசதிகளுடன் வாங்க வேண்டும் என்றால் 2.60 லட்சம் ஆகிவிடும்.

*குறைவான முன் தொகை, மாதத்தவணை என அப்படியும் நடுத்தட்டு மக்களின் காராகவே கருதப்படுகிறது ஒரு கூடுதல் தகுதியே.

*திருப்பும் ஆரம் சுமார் 4 மீட்டர் எனவே குறுகலான,ஜனசந்தடி மிக்கப்பகுதிகளில் பயன்படும்.

* மைலேஜ் நன்றாக உள்ளது.

* டாடா என்ற நம்பகமான பிராண்ட்(இப்போ அந்த நம்பகத்துக்கு வேட்டு வைப்பதும் நானோவே)

என்னால் இந்த அளவுக்கு தான் நானோவின் பலமாக சொல்லமுடியும், அவர்கள் இன்னும் பல பலன்கள் சொல்லக்கூடும் அதெல்லாம் உண்மையில் காகித வாக்குறுதிகளே.

இப்போது குறைகளை காணலாம்.,

வடிவமைப்பு குறை-1

* அதிக இடவசதி எனச்சொல்லிக்கொள்வது ஒரு சுய தம்பட்டமே ,காரின் ,நீளம்,அகலம் மிக குறைவே பின்னர் எப்படி அதிக இடவசதி, உயரத்தினை அதிகரித்து , கன அளவை அதிகரித்து உள்ளே இட வசதி என்கிறார்கள்.

உயரமானவர்களுக்கு தலை இடிக்காது என்கிறார்கள் ஆனால் உட்காரும் போது கால் நீளுமே அதற்கு இடம் எங்கே? கொஞ்சம் பருமனானவர்கள் என்றாலும் கஷ்டமே.

மேலும் நீளம்,அகலம் விகிதத்திற்கு ஏற்ப காரின் உயரம் இருக்க வேண்டும், இல்லை எனில் வளைவுகளில் உருளும் அபாயம் உண்டு, ஏன் எனில் உயரம் கூடும் போது மைய ஈர்ப்பு புள்ளி (cg-Centre of gravity)உயரத்தில் அமையும், திடமாக தரையில் இருக்க மைய ஈர்ப்பு விசை புள்ளி உயரம் குறைவாக இருக்க வேண்டும்.

இரட்டை அடுக்கு பேருந்துகளில் இந்நிலை ஏற்படும். இதனை தவிர்க்க கீழ் தளத்தில் அதிக எடையும், மேல் தளத்தில் குறைவாகவும் இருக்குமாறு செய்வார்கள்.

படம்-1 புவியீர்ப்பு மையம் தாழ்வாக உள்ளப்போது,நிலைப்பு தன்மை அதிகம் எனக்காட்டுகிறது.


படம்-2 , புவியீர்ப்பு மையம் உயரத்தில் இருக்கும் போது நிலைப்பு தன்மை இழப்பதைக்காட்டுகிறது.


வழக்கமான கார்களிலும் வளைவில் திரும்பும் போது சாய்வது போன்ற பிரமை ஏற்படும், நாமும் வளைவின் வெளிப்பக்கம் நோக்கி தள்ளப்படுவோம். ஆனால் கார் சாய்ந்து விடாது நிலையாகவே இருக்கும்.

மேற்சொன்னது எல்லாம் நடக்க காரணம் மைய ஈர்ப்பு விசை சரியான புள்ளியில் இருக்குமாறு கார் வடிவமைக்கப்பட்டுள்ளதே காரணம் ஆகும்.

மேலும் கூடுதல் பாதுகாப்பிற்கு "ஆண்டி ரோல் பார்" (Anti roll bar)என்ற ஒரு இருப்பு கம்பி அமைப்பு காரின் முன் ,பின் அச்சுகளில் பொறுத்தப்பட்டிருக்கும், தரமான கார்களில் இரண்டு அச்சிலும், கொஞ்சம் விலைக்குறைவான கார்களில் முன் அச்சில் மட்டும் பொறுத்தப்பட்டிருக்கும்.

ஆனால் டாடா நானோ காரில் முன்,பின் என இரண்டு அச்சிலும் ஆண்டி ரோல் பார் இல்லை.இதனை நாம் விரும்பினால் பொறுத்திக்கொள்ள முடியும்,ஆனால் அதற்கான அமைப்பு காரில் கொடுக்கப்பட்டிருக்கிறதா என தெரியவில்லை.

எனவே நானோ வேகமாக செல்லும் போது வளைவில் உருண்டு விடும் அபாயம் உள்ளது.

ஆண்டி ரோல் பார் செயல்படும் விதம்:

காரினை இடப்பக்கமாக திருப்புகிறோம் எனில் ,இடப்பக்க சக்கரம் கீழ் அழுந்தும், அதே சம்யம் வலப்பக்க சக்கரத்தின் மீது அழுத்தம் குறைந்து மேலே தூக்கும் , அப்படி தூக்கும் போது 30 டிகிரிக்கு மேல் வாகனம் சாயுமெனில் உருண்டு விடும். இந்த கணக்கு வாகன வடிவமைப்பு, அதில் உள்ள நிறைப்பொறுத்து மாறும், 30 டிகிரி என்பது பொதுவான அளவு.

ஆண்டி ரோல் பார் பொறுத்தப்பட்ட கார் எனில் வலப்பக்க சக்கரம் மேலே தூக்காமல் கீழே அழுத்தி சாலையில் பிடிப்பை ஏற்ப்படுத்தும். ஒருப்பக்கம் கீழே சென்றால் அதற்கு ஏற்ப அடுத்தப்பக்கதில் கவுண்டர் பேலன்ஸ் செய்யும் வகையில் ஆண்டி ரோல்ப்பார் வடிவமைக்கப்பட்டு வாகன அச்சில் பொறுத்தப்பட்டு ,,இடம்,வலம் என இரண்டு சக்கரங்களையும் இணைத்து இருக்கும்.

anti roll bar image:


உதாரணமாக, மாநகரப்பேருந்தின் படிக்கட்டுப்பகுதியில் நிறையப்பேர் தொங்கிக்கொண்டு இருப்பார்கள் இதனால் பேருந்து சாய்ந்து விடுமோ எனப்பயப்படும் அளவில் ஒருப்பக்கமாக சாய்ந்துக்கொண்டு போவதைப்பார்த்திருப்பீர்கள், வாகனத்தின் கூடு தான் சாய்வாக இருக்கும் ஆனால் இரண்டு அச்சின் சக்கரங்கள் இடம்,வலம் என இரண்டுப்பக்கமும் சமமாக சாலையில் இருக்கும். இதற்கு ஒரு காரணம் ஆண்டி ரோல் பார் ,மற்றது வாகனத்தின் மைய ஈர்ப்பு விசைப்புள்ளி குறைவான உயரத்தில் இருப்பது.

டாடா நானோவில் ஆண்டி ரோல் பாரும் இல்லை, மைய ஈர்ப்பு விசையும் உயரமாக வருவது போல வடிவமைப்பு, என எதிர்மறையாக உள்ளது.

வடிவமைப்பு குறை-2

இந்தியாவில் உபயோகத்தில் உள்ள கார்களிலேயே பின் புற எஞ்சின்(rear engine and rear wheel drive)கொண்ட கார் நானோ மட்டுமே(like auto,share auto) வெளிநாடுகளில் போர்ஷ், வோல்க்ஸ் வாகன் பீட்டில் போன்றவை பின் எஞ்சின் வாகனங்களே ஆனால் அவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டு ,பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவை எனவே அவற்றுடன் எல்லாம் நானோவை ஒப்பிட இயலாது.

பின் புறம் எஞ்சின் உள்ளதால் வாகன நிறை சரியான விகிதத்தில் முன்,பின் அச்சுகளிடையே சமமாக நிறவப்பட வேண்டும், (weight balance or mass centralization)ஆனால் நானோவில் அப்படியில்லாமல் பின் அச்சின் மீது 60% எடையும், முன் அச்சில் 40% வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பின் அச்சில் எடைக்கூடினால் என்ன ஆகும்?

வாகனம் வளைவில் சீராக திரும்ப டிபரன்ஷியல் கியர் (differential gear)என்ற அமைப்பு பயன்ப்படுகிறது. அதுப்பற்றி முன்னரே ஒரு பதிவிட்டுளேன். அவற்றை இங்கு காணவும்



வாகனத்தின் எடை சமச்சீராக உள்ள கார்களுக்கே டிபரன்ஷியல் கியர் மட்டுமே சீரான திரும்புதலுக்கு உயர் வேகத்தில் உதவாது என்பதால் "ஆண்டி பிரேக் லாக் சிஸ்டம்"(ABS_ Anti brake lock system) எலக்ட்ரானிக் பேலன்ஸ் கண்ட்ரோல்" (EBC-electronic balance control) and EPS -eletronic assited power steering ஆகியவை பயன்ப்படுத்தப்படுகின்றன.

இது போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இந்தியாவில் விற்கப்படும் நானோக்களில் பொறுத்தப்படவில்லை,சாதாரணமாக காணப்படும் பவர் ஸ்டியரிங்க்கூட இல்லை..மேலும் பின் புற எஞ்சினால் எடையும் சமச்சீராக இல்லை, இந்நிலையில் வளைவில் திருப்பும் போது என்ன ஆகும் எனில்

"குறைவான திருப்புதல் விளைவு "(Under steering effect)ஏற்படும். அப்படியெனில் என்ன,


ஒரு கார் நேர்க்கோட்டில் பயணிக்கிறது எனில் அதன் மீது நேர்க்கோட்டு உந்தம் ஏற்படும் இது தொடர்ந்து நேராக செல்லும் நிலையில் இருக்கும், அப்படி இருப்பது நிலைமம் (inertia)என்பார்கள்.நியூட்டனின் விதியை நினைவில் கொள்க.

இப்போது வலப்புறமாக வாகனத்தினை திருப்ப முயன்றால் என்ன ஆகும் எனில் முன் சக்கரம் மட்டுமே திரும்பும் ஆனால் வாகனத்தின் உடல் மீது செயல்படும் ,உந்தம் ,நிலைமம் காரணமாக நேராக செல்ல எத்தனிக்கும், இதனால் வாகனத்தின் மீது ஒரு திருப்பு விசை செயல்ப்படும், இப்போது இரண்டு அச்சுகளில் பின் அச்சில் எடை அதிகம் இருந்தால் அதற்கு அதிக உந்தம் கிடைத்து பக்கவாட்டில் முன்னால் வரப்பார்க்கும் ,கிட்டத்தட்ட சுழலப்பார்க்கும்(spin), பின்பகுதியானது சாலையைவிட்டு சறுக்கிக்கொண்டு போவது போல போகும், இதனை டிரிப்ட் (drift)என்பார்கள்.

பந்தய மைதானங்களில் கார்கள் இப்படி டிரிப்ட் ஆகிக்கொண்டு செல்வதைப்பார்த்து இருக்கலாம்.டிரிப்ட் ரேஸ் என தனியாகவும் ஒரு பந்தயம் உண்டு. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கார்கள் தான் டிரிப்ட் ஆனாலும் புரளாமல் இருக்கும், நானோ போன்றவை பக்கவாட்டில் பல்டி தான் அடிக்கும்.

இதே விளைவு சாலையின் இடப்பக்கமாக செல்லும் போது இடப்பக்கம் திருப்ப கடினமாக இருக்கும் ,அப்போது அழுத்தம் கொடுத்தால் அதிகம் திரும்பி விடும் இதை அதிக திருப்புதல் விளைவு (over steering effect)என்பார்கள். இது போன்று நிகழ்ந்தால் பக்கத்தில் வரும் வாகனத்தின் மீதோ அல்லது எதிர் திசையில் வரும் வாகனத்தின் மீதோ உரசிவிடும்/மோதிவிடும் அபாயமும் உள்ளது.


எனவே மற்றக்கார்களை போல வளைவில் வேகமாக நானோவை ஓட்டக்கூடாது.

நானோவில் குறை/அதிக திருப்புதல் விளைவை தடுக்க ஒரு முயற்சி செய்துள்ளார்கள் ஆனால் அதுவே ஒரு பயன்பாட்டுக்குறைப்பாடு ஆகிவிட்டது எனலாம், அது என்னவெனில்,

நானோவில் பின் சக்கரங்கள் முன் சக்கரங்களை விட பெரியவை, 155 மி.மி ஆரம் கொண்டவை முன் சக்கரங்கள் 135 மி.மி ஆரம் கொண்டவை சிறியவை. இப்படி பின் சக்கரங்களை பெரிதாக்குவதன் மூலம் பின் அச்சுக்கு அதிக சாலைப்பிடிப்பு (road grip)ஏற்படும் இதனால் குறை திருப்பல், மிகை திருப்பல் விளைவு சிற்றிது கட்டுப்படுத்தப்பட்டு "டிரிப்ட்" ஆவது ஓரளவுக்கு குறையும், ஆனால் இம்முறை ஓரளவுக்கு மட்டுமே கைக்கொடுக்கும்.

இப்படி இரண்டு அச்சுக்கும் வேறு அளவில் டயர்கள் இருப்பதால் ,ஒரே ஸ்டெப்னி டயரைப்பயன்ப்படுத்த முடியாது. நானோ வாங்கும் போது கொடுக்கும் ஸ்டெப்னி டயர் முன் சக்கரத்துக்கானது,எனவே முன் சக்கரம் பங்சர் ஆனால் மட்டுமே உதவும்,பின்னால் பங்சர் ஆனால் கழட்டி எடுத்து சரி செய்து மாட்டிக்கொள்ள வேண்டும். ட்யூப்லெஸ் டயர் என்பதால் பங்சர் ஆனாலும் சுமார் 50 கி.மீ ஓட்டி செல்ல முடியும் என்பதை வைத்தே சமாளிக்கவேண்டும்.

நானோவில் பின் புற ஹேட்ஜ் டோரையும் திறக்க முடியாது.பாதியில் ரேடியேட்டர் அணுக மட்டுமே ஒரு திறப்பு உண்டு. பொருட்களை எல்லாம் உட்புறமாக மட்டுமே வைக்க ,எடுக்க முடியும் என்பதும் ஒரு வடிவமைப்பு குறையாகும்.

இது போல இன்னும் சில பல வடிவமைப்பு குறைகள் இருக்கு மிகவும் ஆபத்தான சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுளேன், இப்போது ஏன் தீப்பிடிக்கிறது என்பதைப்பார்க்கலாம்.

நானோ தீப்பிடிக்கவும் பின் புற எஞ்சின் வடிவமைப்பே காரணமாக இருக்க வேண்டும் என்பது எனது கணிப்பு, ஏன் எனில் டாடாவே சில தீப்பிடிப்பு சம்பவங்களை ஆராய்ந்து சொல்லியுள்ளது என்னவெனில் ,பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய்கள் வெடித்தது(rupture in fuel tube), அல்லது சைலண்சரில் ஏதோ ஒரு பொருள் சிக்கி அடைப்பு ஏற்பட்டது ஆகியவையே காரணம் என சொல்லியுள்ளது.

இதன் காரணமாக பல நானோக்களில் பெட்ரோல் செல்லும் குழாய்களை மாற்றியும் கொடுத்துள்ளது.

பெட்ரோல் குழாய்கள் வெடிப்பதற்கும்,பின் புற எஞ்சினுக்கும் என்ன தொடர்பு?

டாடா நானோவில் பெட்ரோல் டேங்க் முன்புற டிரைவர் சீட்டுக்கு அடியில் உள்ளது, பேட்டரி அதற்கு பக்கத்து சீட்டுக்கு அடியில் உள்ளது. பெட்ரோல் டேங்க் உள்ளே இருப்பதும் அல்லாமல் மின்கலத்துக்கும் அருகில் இருப்பதால் மின்சுற்றுக்கோளாறால் தீப்பிடித்தால் ஓட்டுநரே முதல் பலியாவார் என்பது மிகவும் ஆபத்தான வடிவமைப்பு குறையாகும்.

எஞ்சின் பின்புற இருக்கைக்கு பின்னர் அடியில் உள்ளது. அதன் மீது மூடிப்போட்டு மூடி லக்கேஜ் வைக்கும் பகுதியாக்கிவிட்டார்கள்,பின்பக்க பம்பர் அருகில் ரேடியேட்டர் மையமாக உள்ளது.



இப்படிப்பட்ட வடிவமைப்பில் எஞ்சினுக்கு இயற்கையான காற்றோட்டம்,மற்றும் குளிர்ச்சி கிடைக்காது, ரேடியேட்டர் மட்டுமே குளிரூட்டும் அமைப்பு.வழக்கமாக எல்லாக்கார்களிலும் முன்பக்கம் ரேடியேட்டர் இருக்கும் அப்போது தான் அதிக காற்று உள்வாங்கி நன்றாக குளிர்விக்கும்,ஆனால் நானோவிலே பின்னால் இருக்கிறது எனவே இயற்கையாக காற்று கிடைக்காது ,பேன் மூலம் வரும் காற்றே, அது சிறப்பாக குளிர்விக்க போதுமானதாக இருக்காது.

எனவே எஞ்சின் இருக்கும் பகுதியில் அதிக வெப்பம் நிலவ வாய்ப்புள்ளது.ரேடியேட்டர்களின் அமைவிடம் ஏன் முக்கியம் எனில், ஃபார்முலா ஒன் பந்தயக்கார்களிலும் எஞ்சின் பின் பக்கமே இருக்கிறது,அதிலும் அதிவேகத்தில் ஓட்டப்படுவதால் எஞ்சின் பயங்கரமாக சூடாகிவிடும் ஆனால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு பொறுத்தப்பட்ட ரேடியேட்டர்கள் நன்றாக எஞ்சினை குளிர்விப்பதால் பிரச்சினை ஆவதில்லை.

ஃபார்முலா-1 கார்களின் இரண்டுபக்கமும் ஒரு சாய்வான கோணத்தில் ரேடியேட்டர்கள் பொறுத்தப்பட்டு ,நேரடியாக காற்றுப்படும் படியே வடிவமைத்திருப்பார்கள்.அப்போது தான் விரைவாக எஞ்சினை குளிரிவிக்க முடியும்.இந்த பந்தயக்காரின் படத்தினைப்பார்த்தால் எளிதில் புரியும்.



டாடா நானோவில் முன் புறம் உள்ள பெட்ரோல் டேங்கில் இருந்து பெட்ரோல் ,பின் புறம் உள்ள எஞ்சினுக்கு செல்கிறது, நானோவில் மல்டி பாயிண்ட் பியுல் இஞ்செக்‌ஷன் (MPFI-multi point fuel injection)அமைப்பு உள்ளது. இது எஞ்சினுக்கு மேல உள்ளதும் ,எஞ்சின் மீதாக பெட்ரோல் குழாய் செல்வதையும் இப்படத்தில் காணலாம்.




சரியாக குளிரிவிக்கப்படாத எஞ்சின் அதிக வெப்பமாகிவிடுவதால் , பெட்ரோல் எஞ்சின் சிலிண்டர் உள்ளே சென்றதுமே ,ஸ்பார்க் பிளக் செயல்ப்படும் முன்னரே பற்றிக்கொண்டு வெடிக்கும் இதனை நாக்கிங் (Knocking or detonation or pingking)என்பார்கள், இது போல பல நடக்கும் போது எஞ்சின் பிஸ்டன்(piston)cylinder head, கேஸ்கெட்(gasket) எல்லாம் சிதைந்து வெளியிலும் தீப்பிழம்பு வரலாம்.



கடினமான காஸ்ட் அயர்ன் எஞ்சின் பிளாக் (cast iron block)எனில் ஓரளவு தாங்கும், ஆனால் இப்பொழுதெல்லாம் அலுமினியம்-மெக்னீசியம் கலவையிலான எடைக்குறைவான எஞ்சின் பிளாக்குகளே பயன்ப்படுகின்றன. அதிலும் நானோ எஞ்சின் மிக இலகுவான வடிவமைப்பு அதிக வெப்பம் தாங்குவது கடினமே.அதிக வெப்பத்தில் இரும்பை விட அலுமினியம் 3 மடங்கு அதிகம் விரிவடையும் என்பது கவனிக்க தக்கது.அதிக மைலேஜ் கிடைக்கவே அலுமினியம் அல்லாய் எஞ்ஜின்கள் பயன்ப்படுத்தப்படுகின்றன.

இது போன்ற எஞ்சின் சிலிண்டரில் ஏற்படும் நாக்கிங் மட்டும் இல்லாமல் இன்னொரு வகையிலும் தீப்பிடிக்க வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன்.

எஞ்சின் பிளாக் வெகு அருகில் பெட்ரோல் கொண்டு வரும் குழாய் உள்ளது, அப்பகுதியில் வெப்பம் அதிகமாக இருப்பதால், குழாயில் உள்ள பெட்ரோல் எளிதில் ஆவியாகி விடக்கூடும் இதனால் ஏற்படும் அழுத்தம் தாங்காமல் குழாய் வெடித்தால் ,சூடான எஞ்சின் உள்ள நிலையில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.

nano fire video:



இதனை டாடா நிறுவனம் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாமல் புதிதாக நன்கு இன்சுலேட் செய்யப்பட்ட அதிக அழுத்தம் தாங்கும் பெட்ரோல் குழாய்களை மாற்றி பொருத்தியதிலிருந்தே ,தீப்பிடித்தலுக்கு வடிவமைப்பு ரீதியாகவே ஒரு காரணம் இருப்பது தெளிவாகிறது.

டாடா நிறுவனமே சைலண்சரில் அடைப்பு ஏற்பட்டதால் தீப்பிடித்தது என்றும் சொல்லி இருக்கிறது. அது எப்படி எனப்பார்ப்போம்.

சைலண்சர் எப்படி வேலை செய்கிறது என்பதை எனது பழையப்பதிவான
உங்கள் வாகனம் சத்தம் போடாமல் ஓடுவது எப்படியில் காணலாம்.

எஞ்சினில் இருந்து வரும் புகையானது அதிக வெப்பமாக இருக்கும், சைலைண்சரில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் சரியாக புகை வெளியேறாது, இதனால் ஒரு பின்னோக்கிய அழுத்தம் (back pressure)ஏற்பட்டு மீண்டும் சூடான புகை எஞ்சினுக்குள் சென்று விடும் ,இதனால் எஞ்சின் குளிராமல் அதிக வெப்பமாகும் முன்னர் சொன்னப்படியே "நாக்கிங்" விளைவால் எஞ்சின் சிதைந்து தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.

இது வரைப்பார்த்ததில் இருந்து நானோவில் பிரச்சினைகள் ஏற்படக்காரணம் ,பின்னால் உள்ள எஞ்சினும், சரியாக எஞ்சின் குளிர்விக்கப்படாததும் என்பது புரிந்திருக்கும்.

இது ஒரு வடிவமைப்பு குறைப்பாடு இதனை சரி செய்து நல்ல தரமான ,பாதுகாப்பான காரினை டாடா வெளியிடலாம், ஆனால் விலை ஏறிவிடும்.வெளிநாட்டில் எல்லாம் இப்படி குறைபாடு இருப்பது தெரிந்தால் உற்பத்தியை உடனே நிறுத்திவிடுவார்கள், ஆனால் இங்கோ நிலைமையே வேறு.

முன்னர் டேவூ மோட்டார்ஸ் என்ற கொரிய கம்பெனியின் சியல்லோ வகை கார்களில் இது போல தீப்பிடிக்கும் பிரச்சினை வந்து ,விற்பனைப்பாதிக்கப்பட்டு , பின்னர் வேறு சிலக்காரணங்களால் நஷ்டமும் ஏற்படவே நிறுவனமே மூடப்பட்டுவிட்டது.

தற்போதைய நிலையில் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டால் நானோ வாங்குவது சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்வது எனலாம் :-))

பின் குறிப்பு:

தகவல்கள்,படங்கள் உதவி,
google, team bhp,shell, youtube ,இணைய தளங்கள்,நன்றி!

Sunday, May 20, 2012

FALLING RUPEE:IMPACT ON INDIAN ECONOMY





சமீப நாட்களில் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக வரலாறுக்காணாத அளவில் வெகுவாக குறைந்து வருகிறது ,தற்போதைய நிலவரப்படி ஒரு டாலரின் மதிப்பு 54.47 ரூ ஆகும்.

ரூபாயின் மதிப்பு குறைய காரணங்களாக சொல்லப்படுவன,

அமெரிக்க பொருளாதாரமே சரிவில் இருந்தாலும் அதன் நாணய மதிப்பு உயர்ந்த்து வருவது எப்படி என சந்தேகம் எழலாம், உண்மையில் வேறு எந்த ஒரு நாடாக இருந்தாலும் நாணய மதிப்பு குறைந்து இருக்கும்,ஆனால் அமெரிக்க டாலர் என்பது சர்வதேச அளவிள் பல நாடுகளுக்கு தேவையான ஒரு அன்னிய செலவாணியாக இருப்பதே இதற்கு காரணம்,

சர்வதேச அன்னிய செலவாணி தகுதி எப்படி டாலருக்கு கைக்கொடுக்கிறது எனில், தற்போது யூரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார மந்த நிலை,சரிவு ஆகியவற்றாலே,அதுவும் கிரீஸில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் யுரோவின் நாணய மதிப்பு சரிவடைகிறது,எனவே பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் வசம் இருக்கும் யூரோவிற்கு பதிலாக டாலரை கையிருப்பாக வைத்துக்கொள்ள விரும்பி அதிக அளவில் வாங்குகின்றன.

மேலும் நிதி நிறுவனங்கள், தொழிற்நிறுவனங்களும் டாலரை அதிகம் கையிருப்பு வைத்திருக்க வாங்குகின்றன.அதோடு அல்லாமல் இந்திய ஏற்றுமதியாளர்கள்,மற்றும் வங்கிகளுக்கு யூரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளே சுமார் 40% சதவீத டாலர் பரிவர்த்தனை செய்து வந்தன, அவற்றை பெருமளவு குறைத்துக்கொண்டதும் ஒரு காரணம்.



டாலரின் மதிப்பு உயர்ந்தால் இந்தியா ஏன் கவலைப்பட வேண்டும் இதனால் என்ன கஷ்டம்,நஷ்டம் ,யாருக்கு லாபம் எனப்பார்க்கலாம்.

இந்தியா ஆரம்ப காலம் தொட்டே ஒரு இறக்குமதி நாடு அதாவது நாம் ஏற்றுமதி செய்வதன் மொத்த மதிப்பை விட இறக்குமதி செய்வதன் மொத்த மதிப்பு அதிகம், இதனை ஒரு நாட்டின் நிகழ்கால நிதிக்கணக்கில் (current account of nation)பற்றாக்குறை பட்டுவாடா நிலை (Balance of payment -deificit) என்பார்கள்.

உதாரணமாக இப்படி சொல்லலாம், நாம் 1000 டாலருக்கு உற்பத்தி பொருளை/சேவையை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறோம் எனில் 1500 டாலர் மதிப்பிலான பொருட்களை/சேவைகளை வெளிநாட்டில் இருந்து இறக்கு மதி செய்து விடுகிறோம்.இதனால் என்ன ஆகிறது எனில் ஏற்றுமதி செய்வதால் கிடைத்த 1000 டாலர் தான் இறக்குமதிக்கு செலவிட அல்லது கொடுக்க இருக்கும், மீதி 500 டாலர் கைவசம் இருக்காது பற்றாக்குறையாக போகிறது.

ஒரு பாடல் பாமா விஜயத்தில் வருமே அதான் வரவு எட்டணா,, செலவு பத்தண்ணா அதிகம் இரண்டனா துந்தனா ..துந்தனா தான் எப்போதும் இந்தியாவுக்கு.

பொதுவாக ஆரோக்கியமான நிதி நிலைமை உள்ள நாட்டில்,

இறக்குமதி=< ஏற்றுமதி

என இருக்கும், அப்படிப்பட்ட நாட்டுக்கு மற்ற நாடுகளில் இருந்து அன்னிய செலவாணி வந்து குவியும் அந்நாட்டை உபரி நாடு என்பார்கள்.

இந்தியாவில்,

இறக்குமதி >ஏற்றுமதி

இறக்குமதி ஏற்றுமதியை விட அதிகம் இருப்பதால் நமது பணம் நாட்டில் இருந்து வெளியில் செல்லும் நிலை,எனவே அன்னிய செலவாணி பற்றாக்குறையாக இருக்கும்.

அல்லது ,

ஏற்றுமதி= இறக்குமதி

என சம நிலையில் இருந்தாலும் ஆரோக்கியமான பொருளாதாரம் எனலாம்.

இந்தியா ஒரு பற்றாக்குறை நாடு , நமது இறக்குமதியின் மதிப்பு 75 பில்லியன்ன் டாலர்கள், ஏற்றுமதியை விட 15 பில்லியன்ன் டாலர்கள் அதிகம. எனவே பற்றாக்குறை(Balance of payment) 15 பில்லியன் டாலர்கள்.

அந்நிய செலவாணிப்பற்றாக்குறையை எப்படி அரசு சமாளிக்கும் எனில், அந்நிய நாடுகளிடம் கடன் வாங்கியோ, அல்லது கடன் பத்திரம் கொடுத்து அல்லது பங்கு சந்தையில் வாங்கி என.

இப்போது ஒரு அணைக்கட்ட ஒரு பில்லியன் டாலர் உலக வங்கியிடம் கடன் வாங்குகிறோம், எனில் அதனை எப்படி இந்தியாவில் செலவு செய்யும் அரசு, வேலை செய்பவர்களுக்கு டாலராக கொடுக்குமா என்ன இல்லை,அதே மதிப்புக்கு இந்திய ரூபாய் அச்சடித்துக்கொள்ளும், அந்த டாலர்களை ரிசர்வ் வங்கியில் அன்னிய செலவாணி இருப்பாக வைத்துவிடும்.

இந்த அன்னிய செலவாணிகள் எதற்குப்பயன்ப்படுகின்றன என்றால் இறக்குமதிக்கு அதில் பெருமளவு பெட்ரோலிய பொருட்களுக்கும்,அடுத்து தங்கம் இறக்குமதிக்குமே செலவாகிறது.

இப்படி பெட்ரோல்,தங்கம் என இறக்குமதி செய்து மீண்டும் டாலர் வெளியில் போய்விடும், அதை குறைக்க ஒரு வழியாகத்தான் அரசு பெட்ரோலிய,தங்க நுகர்வை குறைக்க அவற்றின் மீதி அதிக வரி, விலையேற்றம் எல்லாம் செய்கிறது.இதனால் நுகர்வு குறைய வேண்டும்,ஆனால் நம்ம ஆட்களோ போட்டிப்போட்டுக்கொண்டு அட்சய திருதியை ,அம்மாவாசைனு சொல்லிக்கிட்டு தங்கம் வாங்குவதை குறைப்பதேயில்லை.

பைக்கில் பெண் நண்பியை அழைத்துக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் உல்லாச சவாரிப்போவதையும் குறைப்பதில்லை.நாம் தான் காசுக்கொடுத்து விடுகிறோமே அப்புறம் என்ன எனலாம் ,அது ரூபாய் ,பெட்ரோல் இறக்குமதி செய்ய டாலர் அல்லவா வேண்டும்!

அரசுக்கு எப்படி ஏற்றுமதியாலர்களிடம் இருந்து டாலர் கிடைக்கிறது எனப்பார்க்கலாம், மேலும் ரூபாய் மதிப்பு குறைந்தால் மகிழ்ச்சி அடைபவர்கள் யார் எனவும் பார்க்கலாம்.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி செய்பவர் அமெரிக்காவிற்கு 1 லட்சம் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்ய ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறார், சரக்கு டெலிவரி ஆகும் அன்று அமெரிக்கர் ஒரு லட்சம் டாலர் கொடுப்பார் என ஆர்டர் எடுக்கும் போது ஒப்பந்தம் ஆகிறது எனில் அன்று டாலர் மதிப்பு 45 ரூ என இருக்கு எனில் இந்திய மதிப்பில் 45 லட்சம் ஆகும்.

சரக்கு அமெரிக்காவில் 1 மாதம் பின்னரே டெலிவரி ஆகிறது,அன்று டாலர் திருப்பூர் ஏற்ருமதியாளருக்கு கையில் வரும் அப்போது இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக 50 ரூ ஆகிவிட்டது எனில் அவர் 1 லட்சம் டாலரை வங்கியில் கொடுத்தால் 50 லட்சம் கிடைக்கும்.எதிர்ப்பார்த்தது , 45 லட்சம் ஆனால் 5 லட்சம் கூடுதலாக கிடைத்துவிட்டது.

இந்த காரணங்களுக்காகவே அடிமாட்டு விலைக்கு கூட ஏற்றுமதி செய்ய திருப்பூரில் பலரும் முன்வருகிறார்கள். உற்பத்தி செய்த பொருளை அடக்க விலைக்கு விற்றாலும் அன்னிய செலவாணி பரிமாற்ற விகிதத்தின் மூலம் லாபம் கிடைக்கும் என கணக்குப்போட்டு வியாபாரம் செய்கிறார்கள்.பலரும் ஏற்றுமதி ஆர்டர் எடுத்துவிட்டு டெலிவரி நாளுக்குள் டாலர் மதிப்பு உயர வேண்டும் என டென்ஷனுடன் இருப்பார்கள் ;-))

இதிலும் அபாயம் உண்டு , டாலர் மதிப்பு குறைந்து விட்டால் கையை சுட்டு விடும்,காரணம் மிக குறைவான விலைக்கு ,அதிலும் உள்நாட்டு விலையை விட குறைவான விலைக்கு விற்க ஒப்பந்தம் போட்டு இருப்பவர்கள் அதிகம்.

உதாரணமாக ஒப்பந்தம் அன்று ஒரு டாலர் 45 எனப்பார்த்தோம், டெலிவரி அன்று 40 ரூபாயாக டாலர் குறைந்து விட்டால் ,திருப்பூராருக்கு ஒரு லட்சம் டாலருக்கு 40 லட்சம் தான் கிடைக்கும், ஏற்கனவே அடிமாட்டுக்கு விலைக்கு பேசி இருப்பதால் 5 லட்சம் குறைந்தால் பெரும் நட்டம் ஆகிவிடும்.

இந்திய அரசுக்கோ டாலர் மதிப்பு குறையணும், திருப்பூர் ஏற்றுமதியாளருக்கோ உயரணும், நாட்டை விட அவர் வியாபாரம் முக்கியம் இல்லையா?

இந்த அபாயத்தினை திருப்பூர் ஏற்றுமதியாளர் தவிர்க்க முடியாதா எனக்கேட்கலாம் முடியும் ,

விலைப்பேசும் போதே குறிப்பிட்ட லாபவிகிதம் வைத்து வழக்கமான வியாபாரம் போல ஒப்பந்தம் போடலாம், ஆனால் அப்படி செய்யாமல் போட்டியில் தனக்கே ஆர்டர் கிடைக்க வேண்டும் என போட்டிப்போட்டுக்கொண்டு விலையை குறைத்து பேசுவார்கள்,பின்னர் அன்னிய செலவாணி மூலம் சரிக்கட்டிக்கலாம் என்று. இது தேவையற்ற அபாயகரமான ஒரு வியாபார அணுகுமுறை ஆகும். இதனாலே இப்பொழுது திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளார்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் இப்போது நிலவும் டாலர் மதிப்பைப்பார்த்து ஆனந்தத்தில் மிதப்பார்கள் என நினைக்கிறேன்.

அதோடு அல்லாமல் வங்கி மூலம் முன் வியாபார ஒப்பந்தம்(Forward contract) போட்டாலும் நட்டம் வராமல் தடுக்கலாம். எப்படி எனில் இன்று டாலர் 45 ரூ எனில் ஒரு மாதம் கழித்து டெலிவரி ஆகும் போதும் அதே விகிதத்தில் பணம் தரும் வங்கி.அதாவது டாலர் மதிப்பு குறைந்தால் வரும் நட்டத்தினை வங்கி ஏற்றுக்கொள்கிறது. இதனால் எதிர்காலத்தில் இழப்பு ஏற்படும் என்ற பயம் ஏற்றுமதியாளருக்கு இல்லை.

சரி வங்கி ஏன் தானாக முன்வந்து இதை செய்ய வேண்டும், ஏன் எனில் அரசுக்கு டாலர் தேவை பெட்ரோல் வாங்க ,எனவே வங்கிகள் மூலம் இப்படி திரட்ட ஏற்பாடு. மேலும் ஒரு காரணம் இருக்கு , இப்போ டாலரின் மதிப்பு ஒரு மாதம் கழித்து 50 ரூ ஆனால் அப்போதும் ஏற்றுமதியாளருக்கு 50 லட்சம் கொடுக்காது, முன் வியாபார ஒப்பந்தம் போட்டப்போது 45 ஒரு டாலர் என்ற விகிதத்தில் 45 லட்சம் மட்டுமே கொடுக்கும், மீதி 5 லட்சம் வங்கிக்கு லாபம்..ஹி..ஹி இப்போ தெரியுமே வங்கி ஏன் ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடுறாப்போலனு முன் வந்தது என :-))

இதனாலே திருப்பூர்காரர்கள் என்று இல்லை பெரும்பாலான இந்திய ஏற்றுமதியாளர்கள் முன்வியாபார ஒப்பந்த்தினை வங்கி மூலம் போடாமல் ,அவர்களே ரிஸ்க் என்ற ரஸ்க் சாப்பிட ஆசைப்படுகிறார்கள்,சில நேரம் ரிஸ்க்,பல நேரம் ரஸ்க் கிடைக்கும், இப்போ ஏற்றுமதியாளர்கள் ரஸ்க் சாப்பிடும் நேரம் :-))

ரூபாய் சரிவால் அரசுக்கு கூடுதலாக செலவு செய்து டாலர்கள் வாங்க வேண்டியதாகிறது.அப்படி கூடுதலாக செலவு செய்து டாலர் வாங்கி ,அதில் பெட்ரோல் வாங்கி, பழைய விலையில் விற்றால் நட்டம் என சொல்லித்தான் பெட்ரோல் விலையை ஏற்றுகிறது அரசு. அரசும் கையை சுட்டுக்க விரும்பாது தானே.பெட்ரோல் விலையில் பாதி அரசின் வரி என முன்னரே ஒரு பதிவில் பார்த்துள்ளோம், வரியை குறைத்தாலே போதும் ஆனால் செய்ய மாட்டார்கள், ஒரு வியாபாரிப்போல ஏற்றியதைக்குறைக்காமல் மீண்டும் ஏற்றவே பார்ப்பார்கள்.

இங்கே இன்னோன்றையும் கவனிக்க வேண்டும், டாலர் மதிப்பு உயர்கிறது என்றால் அது உலக அளவிலும் உயர்ந்து தானே இருக்கும், எனவே எண்ணை உற்பத்தி நாடுகளின் நாணயத்திற்கு எதிராகவும் உயரும், இதனால் முன்னர் ஒரு பேரல் 100 டாலர் எனில் ,மதிப்பு உயர்வுக்கு ஏற்ப குறைந்து விடும் அதாவது ஒரு பேரல் 90 டாலருக்கே கிடைக்கும்,கிடைக்க வேண்டும், எனவே சரிந்த ரூபாயால் ஏற்பட்ட இழப்பு ஒரு அளவுக்கு சமன் ஆகி நாம் கொடுக்க வேண்டிய டாலர் அளவு குறைந்துவிடும், எனவே அரசுக்கு பெட்ரோல் வாங்கிய வகையில் பெருமளவு நட்டம் வர வழியில்லை, ஆனால் அரசோ தட்டையாக டாலர் விலை ஏறிவிட்டது எனவே பெட்ரோல் விலை ஏற்றப்போகிறோம் என சொல்லி மக்கள் தலையில் விலையை கட்டிவிடும் :-((

ரூபாய் சரிந்தால் ஏற்றுமதியாளருக்கு கொண்டாட்டம், அரசும் நட்டம் எனப்புலம்பினாலும் உண்மையில் பெரிய நட்டம் இருக்காது ஆனால் அஷ்டகோணாலாக முகத்தினை வைத்துக்கொண்டு நிதியமைச்சர் என்னமோ வேண்டா வெறுப்பாக செய்வது போல பெட்ரோல் விலையை ஏற்றிவிடுவார், உண்மையில் இதில் உதைவாங்குவது பொது ஜனமாகிய நாம் தான் :-))

# ரூபாய் மதிப்பு சரிவை சரிக்கட்ட அரசு என்ன செய்யும் எனில்,

1)ரிசர்வ் வங்கியில் உள்ல கையிருப்பு டாலர்களை பயன்படுத்தும்,நீண்ட நாட்கள் சரிவு நீடித்தால் கஷ்டம் தான்

2)தங்கம் இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கும்,அல்லது வரி உயர்த்தி இறக்குமதியாளர்களை விரட்டும்.

3)வெளிநாடு வாழ் இந்தியர்கள் ,இந்திய வங்கியில் வைப்பு நிதியாக வைத்தால் அதிக வட்டி தரும் என அறிவிக்கும். இதனால் டாலர் வரத்து அதிகரிக்கும்.

4)இந்தியாவில் உள்ளப்பெரிய ஏற்றுமதியாளர்கள் கைவசம் எப்போதும் பெரிய அளவில் டாலர்கள் இருக்கும்,அதில் 50% கண்டிப்பாக வைப்பு நிதியாக வைக்க சொல்லும் மேலும் கூடுதல் வட்டியும் தருவதாக சொல்லும்.

5)கடன் பத்திரங்கள், வெளிநாட்டு வங்கிகள், நாடுகளிடம் கடன் வாங்கும், சில நாடுகளுடன் அன்னிய செலவாணி ஒப்பந்தங்கள் உள்ளது அதன் மூலம் சமாளிக்கும்.

உ.ம்: ஜப்பானுடன் ஒரு அன்னிய செலவாணி உதவி ஒப்பந்தம் இருக்கிறது, இது போல சரிவு வரும் போது ஜப்பான் 15 பில்லியன் அமெரிக்க டாலர் க்டன் கொடுத்து உதவ வேண்டும், அதே போல இந்தியாவும் கொடுத்து உதவ வேண்டும்.

இன்னும் பல நடவடிக்கைகள் இருக்கு. முடிந்தவரைக்குறிப்பிட்டுள்ளேன்.

பின் குறிப்பு:

#ரூபாய் சரிவால் இன்னும் பல விளைவுகள் இருக்கு, முக்கியமாக பங்கு சந்தை தள்ளாடும், வெளிநாட்டில் இருந்து தொழில் தொடங்க முன்வருபவர்கள் குறைவார்கள், உற்பத்தி பாதிக்கும் எனலாம் பிரச்சினை இருக்கு,இங்கு ஒரு சில பிரச்சினைகளை மட்டும் அலசி இருக்கேன், மற்றவற்றை நேரம் இருப்பின் தொடர்கிறேன்.

பொருளாதார விளைவுகளை முழுமையாக ஒரே பதிவில் பேசிவிட முடியாது ,இது ஒரு எளிய முயற்சியே. மேலும் பல விவரங்களை எளிமையாக சொல்ல வேண்டும் என லேசாக சொல்லி இருக்கேன், முழுமையாக சொல்லவில்லை என மேதைகள் மல்லுக்கட்டக்கூடும் என்பதால் இந்த முன் ஜாமின் :-))

# தகவல்,படங்கள், கூகிள், ரெடிப், எகனாமிக் டைம்ஸ் இணைய தளங்கள்,நன்றி!

*****

Saturday, May 19, 2012

"வசூல்ராஜா எம்பிபிஸ்"கள் இனியாவது கிராமத்திற்கு வருவார்களா?



இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மருத்துவக்கல்லூரிகள் இருந்தாலும் மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் தேவையான மருத்துவர்களை உருவாக்கும் அளவுக்கு கல்லூரிகளின் எண்ணிக்கை இல்லை எனலாம் ,மேலும் உருவாகி வரும் மருத்துவர்களும் நகரத்திலேயே தங்கி விடுகிறார்கள் எனவே கிராமப்புரங்களில் மருத்துவ வசதி நிலைமை ரொம்பவே மோசம்.


தேவையான மருத்துவர்களை உருவாக்கவே அரசு மருத்துவக்கல்லூரிகளை உருவாக்கி ,மருத்துவப்படிப்பை குறைவானக்கட்டணத்தில் வழங்கி வருகிறது. ஆனால் கிராமங்களுக்கு மருத்துவர்கள் பணிப்புரிய செல்வதேயில்லை, அனைவரும் வருமானம்,வசதி இன்னப்பிற காரணங்களை முன்னிட்டு நகரங்களில் தங்கி விடுகிறார்கள்.

தனியார் மருத்துவக்கல்லூரியில் படிக்க வேண்டும் எனில் குறைந்தது 25 லட்சம் ஆகும்,ஆனால் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சில ஆயிரங்களில் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு கிராமங்களில் அரசு மருத்துவராக பணி நியமனம் செய்தால் செல்ல மறுக்கிறார்கள்,இப்பிரச்சினை நீண்டகாலமாகவே இருக்கிறது, எனவே மருத்துவ மாணவர்கள் கிராமப்பணி செய்வதை கட்டாயம் என சட்டம் கொண்டு வர இருப்பதாக மத்திய சுகாதார நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்,.

செய்தி:


டெல்லி: மருத்துவ மாணவர்கள், கிராமப்புறங்களில், ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்பதை கட்டாயமாக்கப் போவதாக மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

செய்தி சுட்டி;

இதுதொடர்பாக, மக்களவையில் குலாம்நபி ஆசாத் பேசியதாவது: கிராமப்புறங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றினால், அவர்கள் மருத்துவ முதுநிலைப் படிப்பில் சேர 50% இடஒதுக்கீடும், ஓராண்டு பணியாற்றினால் 10 மதிப்பெண்களும், பின்தங்கிய கிராமங்களில் பணியாற்றினால் 30 மதிப்பெண்களும் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

ஆனால், இவ்வளவு சலுகைகளை அறிவித்தாலும்கூட, கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவ மாணவர்கள் முன்வரவில்லை. எனவேதான், கிராமப்புறங்களில் பணியாற்றுவதை கட்டாயமாக்கும் நிலை வந்துள்ளது.

சமீபத்தில் சென்னை வந்த மகாராஷ்டிர மருத்துவக்கல்வி அமைச்சர் அவர்கள் மாநிலத்தில் உள்ள சட்டம் பற்றிக்கூறியது....

சென்னை:""எங்கள் மாநிலத்தில், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், கிராமப்புறங்களுக்குச் சென்று பணியாற்றவில்லை எனில், அதிகபட்சமாக இரண்டு கோடி ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்,'' என, மகாராஷ்டிர மருத்துவக் கல்வி அமைச்சர், விஜய்குமார் காவித் கூறினார்.

News link-2

மத்திய அரசு சொல்லிக்கொண்டே இருக்கிறது பல காலமாய் ஆனால் சிலர் எதிர்ப்பு தெரிவித்தால் பின் வாங்கிவிடும், எனவே மத்திய அரசை நம்பாமல் தமிழக அரசு , மகாராஷ்டிர மாநிலத்தினை முன் மாதிரியாகக்கொண்டு மருத்துவர்கள் கட்டாய கிராம சேவை செய்ய வேண்டும் என சட்டம் கொண்டு வரலாம், எது எதற்கோ அதிரடியாக செயல்படும் அம்மையார் இவ்விஷயத்தில் இரும்புக்கரமோ ,சாட்டையோ சொடுக்கினால் மக்களுக்கு பயன் அளிக்குமே.

இனியாவது வசூல் ராஜா எம்பிபிஎஸ்கள் பணியாற்ற கிராமத்திற்கு போக முன் வருவார்களா?

மருத்துவ மாணவர்களின் கிராம புறக்கணிப்பு பற்றி 2007 இல் நான் எழுதிய பதிவு,


--------------

பின்குறிப்பு:

தகவல்,படங்கள் உதவி,

கூகிள்,தினமலர்,சுலேகா.காம்,இணைய தளங்கள்,நன்றி!

*****

Friday, May 18, 2012

அமெரிக்க பொருளாதார சரிவும் ,வால்ஸ்ட்ரீட் முற்றுகையும்!



அமெரிக்க பொருளாதார சரிவும் ,வால்ஸ்ட்ரீட் முற்றுகையும்!

இப்பதிவு மே-1 அன்று போட்ட "may day-1,occupy wall street,social justice, financial justice,என்ன இணைப்பு? " என்றப்பதிவின் தொடர்ச்சியே இப்பதிவு!

சமூக நீதி:(social justice)

பிறப்பால்,நிறத்தால் பாகுபாடு பார்க்கப்பட்டு ஒருவருக்கான உரிமைகள் மறுக்கப்படுவதை தடுத்து அனைவரும் சமம் என சொல்வது சமூக நீதி,

அப்படி சமூக சமத்துவம் மறுக்கப்படும் சூழலில் அதற்காகப்போராடுவது சமூக நீதிப்போராட்டம் எனலாம்.

உதாரணமாக கீழ்காண்பவற்றை சொல்லலாம்,

மேல் நாடுகளில் வெள்ளை,கருப்பு இனபேதம் நீக்கி உரிமைகளுக்காக போரடிய நிகழ்வுகள்.மார்ட்டின் லூதர் கிங்,ஜூனியர், மற்றும் ஆப்பிரஹாம் லிங்கன் போன்றோர் அமெரிக்காவில் சமூக நீதிக்காக செயல்பட்டவர்களில் முக்கியமானவர்கள்.தற்போது இனவாதம் பேசுவது,பழிப்பது போன்றவை குற்றம் என்னும் அளவில் சமூக நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் வர்ணாசிரம வகைப்பாடுகளால் ஏற்பட்ட ஏற்ற தாழ்வு பேதங்களை நீக்க போரடிய நீண்ட வரலாறு உண்டு, அம்பேத்கர், பெரியார். ஆகியோரின் போராட்டங்கள் அவ்வகையே . முழுதும் இல்லையென்றாலும் சமூக நீதி அடைவதில் ஓரளவு வெற்றியடைந்துள்ளோம்.

உலக அளவிலும் சரி ,இந்தியாவிலும் சரி சமூக நீதி குறித்தான விழிப்புணர்வு, சம நிலை என்பன ஓரளவு சாத்தியமாகியுள்ளது எனலாம்.

சமூக நீதிப்போராட்டங்களை பற்றி பின்னர் முடிந்தால் தனிப்பதிவிடுகிறேன்.

ஆனால் இந்தியாவில் ஒருவரின் வாழ்வுக்கு ஆதாரமான பொருளாதார நீதி குறித்து பெரிதாக பேசப்பட்டதா ,போராடப்பட்டதா என்றால் கேள்விக்குறி தான் எஞ்சுகிறது.

ஒருவன் ஏழையாய் இருக்கிறான் என்றால் அவன் ஏழையாய் பிறந்துவிட்டான் அதற்கு அடுத்தவர்களோ அரசோ என்ன செய்ய முடியும் என பொதுவான அபிப்பிராயம் உருவாகியுள்ளதே காரணம் ஆகும்.

கம்யூனிஸ்ட்கள் இந்தியாவில் அதற்காக பாடுபடுவதாய் சொல்லிக்கொண்டாலும் எதுவும் நடைமுறையில் நிகழவில்லை,கொள்கையளவில் மட்டுமே அனைத்தும் பொதுவுடமையாக இருக்கு.


பொருளாதார நீதி(Financial justice)

வாழ்வதற்கு தேவையான வளங்கள்,பொருளாதார கூறுகள் ஆகியவற்றில் குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமை உண்டு.வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட வேண்டியது ஒரு மக்கள் நல அரசின் கடமை என சொல்வதே பொருளாதார நீதி!

அனைத்து ஜனநாயக நாட்டின் அரசியலைப்பும், கொள்கைகளும் என்ன சொல்கிறது ஒவ்வொருவரின் வாழ்வுரிமைக்கும் , வாழ்வாதாரத்துக்கும் பாதுகாப்பும், சம உரிமையும் அளிக்கப்பட வேண்டும் என்றே சொல்கிறது. ஆனால் நடை முறை வேறாக இருப்பது கண்கூடு.

பொருளாதார நீதி ,சமத்துவம் என யாரும் போராடவில்லையா எனக்கேட்கலாம், அதற்காக உருவானது தான் கம்யூனிசம். கம்யூனிசத்தின் மூலமே பொருளாதார சமத்துவமே, அனைவருக்கும் அனைத்தும் , என சொல்லி அனைவருக்கும் பொருளாதார ரீதீயாக மேம்படுத்த வளங்களை பகிர வேண்டும் என்று சொல்கிறார்கள்,ஆனால் எப்படி அந்த கொள்கையை அடைவது என்ற வழியினை அறியாமல் செயல்படுத்துவதில் சொதப்பியதன் விளைவே சோவியத் ருசியாவின் சிதைவுக்கு மூலகாரணம் ஆனது வரலாறு.

மே தினம், ஆக்குபை வால்ஸ்ட்ரீட்(occupy wallstreet), பொருளாதார நீதி எல்லாம் ஒரே புள்ளியில் இணைபவையே. மே தினம் உழைப்பாளர்களின் உரிமையையும், ஊதியத்தையும் நிர்ணயிக்க போராடிய தொழிலாளர் பொருளாதார நீதி போராட்டத்தின் அடையாளமே.

அதே போன்ற ஒரு போராட்டமாக வெடித்திருப்பது தான் ஆக்குபை வால்ஸ்ட்ரீட், ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கு தேவையான பொருளாதாரம் கிட்ட வேண்டும், அதை ஈட்ட அனைவருக்கும் சம உரிமையும் வாய்ப்பும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே அப்போராட்டம்.

பங்கு சந்தைக்கும் ,பொதுமக்களின் பொருளாதார சம நிலை, பாதிப்புக்கும் என்ன தொடர்பு? ஏன் அவர்கள் பங்கு சந்தைக்கு எதிராக அணி திரள வேண்டும் என கேட்கலாம் ,அதற்கு சில உதாரணங்களை காண்போம்.

உலக பொருளாதார சரிவின் மையப்புள்ளி:

தற்போது ஐரோப்பா, அமெரிக்கா முதல் இந்தியா வரை பெரும்பாலான நாடுகளில் பொருளாதா மந்த நிலையும் ,சரிவும் நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே, இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒரு முக்கியமான காரணமாக இருப்பது வணிக வங்கி, தொழில் வங்கி, நிதி நிறுவனங்கள் , பங்கு சந்தைகளின் செயல்ப்பாடும் அவற்றுக்கு அளிக்கப்படும் சிறப்பு சலுகை, விதி விலக்குகள் என்பதும் பலருக்கும் நம்ப கடினமாக இருக்கும் உண்மை, ஆனால் அமெரிக்க மக்கள் இதனை தெளிவாக புரிந்துக்கொண்டதாலே வால்ஸ்ட்ரீட்டை முற்றுகை இட்டுள்ளார்கள்.

எப்படி என இப்போது விரிவாக பார்ப்போம்,,

ஒருவர் வீடு வாங்க வங்கியிடம் வீட்டுக்கடன் வாங்கிறார், அவர் வாங்கிய கடனை சில ஆண்டுகளுக்கு வட்டியுடன் மாதத்தவணையாக கட்டுகிறார்.இதன் மூலம் வங்கிக்கு வருவாய் வரும். இது போல பலருக்கும் கடன் கொடுத்து மாதத்தவணையில் வசூலிக்கிறது. இது ஒரு வங்கியின் பொதுவான செயல்பாடு என்பது அனைவருக்கும் தெரியும்.

இப்படி கடன் "கொடுக்கல்-வாங்கல்" நிகழ்வு இரண்டு புள்ளிகளில் முடிந்தால் சிக்கலில்லை ஆனால் சிக்கலாக்கவே சில பொருளாதார கண்டுப்பிடிப்புகள் இருக்கு ,

ஒரு பத்து பேருக்கு கடன் கொடுத்து ,தவணை வசூலிக்கிறது வங்கி என வைத்துக்கொள்வோம், இதனை ஒரு வருவாய் என கணக்கில் கொண்டு அதனை ஒரு கடன் பத்திரம் ,ஷேர் போல மாற்றிவிடுவார்கள், இது போன்று பல வீட்டுக்கடன்கள் ஒன்றாக குவிக்கப்படும்(pool) இதன் மதிப்பினை கணக்கிட்டு ரேட்டிங்க் கொடுக்க சில நிறுவனங்கள் இருக்கு அவை கொடுக்கும் ரேட்டிங்க் அடிப்படையில் பங்கு வர்த்தகத்தில் பங்கு கொள்ளத்தக்க சான்றாக மாறிவிடும் இதனை டெரிவேட்டிவ்ஸ் (derivatives)என்பார்கள்.

டெரிவேட்டிவ்ஸ் என்றால் ஒன்றிலிருந்து மதிப்பினை உருவாக்கி கொண்டு வருவது என பொருள்.

டெரிவேட்டிவ் மூலம் கிடைக்கும் பங்கு போன்ற சான்றுக்கு செக்யுரிட்டி என்று பெயர். இதனை பங்கு சந்தையில் வியாபாரம் செய்யலாம் அல்லது இன்னொரு பெரிய வங்கியில் அடகு வைத்து பணம் வாங்கலாம்,அல்லது விற்கலாம்.

வழக்கமாக ஒரு பொது வணிக வங்கி என்ன செய்கிறது என்றால் அதன் வசம் உள்ள செக்யீரிட்டிகளை இன்னொரு பெரிய தொழில் வங்கியிடம் விற்றுவிடும், இதனை மார்டேஜ் பேக்டு செக்யூரிட்டி (mbs-mortage backed securites)என்பார்கள்.

மார்ட்டேஜ் என்பது அடகு வைப்பது , வீடு என்ற பொருள் அடகாக வைக்கப்பட்டு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வந்த டெரிவேட்டிவில் இருந்து செக்யூரிட்டிக்கு வீட்டின் மதிப்பு அல்லது மாத தவணையே ஒரு பிணை என்பதன் பொருளே இது.

சிறிய வங்கி கொடுத்த கடனுக்கு இணையாக செக்யூரிட்டிகளை விற்று பணம் திரட்டி மீண்டும் கடன் கொடுக்க துவங்கிவிடும். இதன் மூலம் அதற்கு மீண்டும் மூல தனம் கிடைத்துவிடும்.

பெரிய வங்கி அந்த செக்யூரிட்டிகளை பங்கு சந்தையில் விற்று காசுப்பார்த்து விடும்.மேலும் ஒரு பாதுகாப்பிற்கு அந்த செக்யூரிட்டிகளை காப்பீடு நிறுவனங்களிலும் காப்பீடு செய்துவிடும்.இதனால் கடன் என்ற "ரிஸ்க்" பரவலாக்கப்பட்டுவிடும், கடன் வாங்கியவர்கள் திருப்பி செலுத்த தவறினாலும் சொந்தக்காசுக்கு இழப்பு குறைவாகிவிடும் அல்லது இழப்பு இருக்காது.

இப்போது இந்த சங்கிலித்தொடர் வர்த்தகத்தின் வருவாய் வழி என்ன எனப்பார்ப்போம்,

தவணை வசூலிக்கும் சிறிய வங்கி அதற்கு லாபமாக கிடைக்கும் வட்டியில் இருந்து ஒரு பங்கிணை ,பெரிய வங்கிக்கு கொடுக்கும் ,பெரிய வங்கி அதில் இருந்து டிவிடெண்ட் ஆக செக்யூரிட்டியை வாங்கியவர்களுக்கு கொடுக்கும்.

இதன் மூலம் என்ன நடக்கிறது என்றால் சிறிய வங்கி கொடுத்த கடன் தொகையானது பங்கு சந்தையில் இருந்து பல சிறிய ,பெரிய முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்டு விட்டது.உண்மையில் வீடு வாங்க கடன் கொடுத்தது வங்கியல்ல , பங்கு சந்தை முதலீட்டாளர்கள்.ஆனால் இடையில் செயல்படும் இரண்டு வங்கிகளும் பெருமளவு லாபத்தினை அடைவார்கள்,ஒரு பக்கம் வட்டி என்ற வருமானம் மறுப்பக்கம் பங்கு சந்தை வருமானம், ஆனால் பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறிய தொகை தான் கிடைக்கும். பின்னர் ஏன் அவர்கள் வாங்குறார்கள், வேறு ஒன்றும் இல்லை யூகத்தின் அடிப்படையில் பங்கு சந்தையில் விலை ஏறும் போது விற்று விட்டு அதில் லாபம் பார்க்க தான்.

ஒரு வங்கி நன்றாக செயல்ப்படும் போது ,அது என்ன டிவிடெண்ட் கொடுக்கும் என்றெல்லாம் பார்க்காமல் செக்யூரிட்டிகளின் விலைப்பங்கு சந்தையில் ஏறும் எனவே அவ்வப்போது விற்று வாங்கி லாபம் பார்த்துக்கொள்ளலாம் என்றே வாங்குகிறார்கள்.

இந்த பணப்பரிவர்த்தனை லாபம் எல்லாம் ஒழுங்காக போகும் எது வரை என்றால் வீட்டுக்கடன் வாங்கிய நபர் மாதத்தவணையை ஒழுங்காக கட்டும் வரையில் :-))

அதிக அளவில் செக்யூரிட்டிகளை உருவாக்க வங்கிகள் அதிகக்கடன் கொடுக்கும் ,இதனால் திருப்பி கட்ட வருமானம் இருக்கா என்றெல்லாம் யோசிக்காமல் கடனை அள்ளிவிட்டார்கள். சரியான வருமானம் மற்றும் கடன் திருப்பி செலுத்தும் சக்தியுள்ளவர்களை மதிப்பீடு செய்து பிரைம்(prime) என்றும் ஏற்கனவே சரியாக செலுத்த தவறிய கடன் வரலாறு கொண்டவர்களை சப்-பிரைம் (sub-primes)என்றும் வகைப்படுத்தினார்கள்.

முன்னர் சொன்னது போல அதிக அளவு கடன் கொடுக்க வேண்டும் என்று சப்-பிரைம் கடனாளிகளுக்கும் கடன் கொடுக்கப்பட்டது.ஒரு கட்டத்தில் பெரும்பாலோர் கடனை திருப்பி செலுத்தாமல் தவறவே சிறிய வங்கி பெரிய வங்கிக்கு பங்கு கொடுக்கமுடியாமல் கை விரிக்க , பெரிய வங்கி பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் கொடுக்காமல் கையை விரிக்க ,சந்தையில் தள்ளாட்டம் ஏற்பட்டது.

முன்னரே பெரிய வங்கி செக்யூரிட்டிகளை காப்பீடு செய்தது எனப்பார்த்தோம் அல்லவா அது எதற்கு என்றால் இது போல மார்டேஜ் பேக்டு செக்யூரிட்டிகள் மூலம் வரும் வருவாய் நின்றால் அதனை காப்பீடு நிறுவனம் தர வேண்டும் என்றே.பெரிய அளவில் நஷ்டம் வரும் போது பெரிய அளவில் காப்பீட்டு நிறுவனம் நஷ்ட ஈடு தரவேண்டியது இருக்கும். இப்படி செய்வதையும் கிரடிட் டிபால்ட் ஸ்வாப்(cds- credit default swap) என சொல்லிக்கொள்கிறார்கள்.

ஒரு சாதாரண வீட்டுக்கடனை ,வங்கி மாற்றி வங்கி எனக்கொண்டு போய் ,காப்பீடு நிறுவனம் ,பங்கு சந்தை , அதில் பல சிறு முதலீட்டாளார்கள் என சம்பந்தப்படுத்தி சிக்கலாக்குவது தான் பொருளாதார நிபுணத்துவம் :-))

சிறிய வங்கி என்னால் கொடுக்க முடியாது என மஞ்சள் கடுதாசி கொடுக்கிறேன் சொல்லும் பெரிய வங்கி காப்பீட்டு நிறுவனத்தை நெறுக்கும் தொகை பெருசா இருந்தா அதுவும் மஞ்சள் கடுதாசி என்று சொல்லிவிடும், இப்போ பெரிய வங்கியும் மஞ்சள் கடுதாசி என்று சொல்லிவிட்டால் போதும் பங்கு சந்தையில் செக்யீரிட்டிகளை வாங்கியவர்களுக்கு பட்டை நாமம் தான். இந்தக்கதை தான் அமெரிக்காவில் நடந்துக்கொண்டு இருக்கிறது.மேலும் பல ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலை தான்.

இதற்கு உதாரணம் கோல்டுமேன் சாஷ்(goldman sachs),ஏ.ஐ.ஜி (american inter national group-AIG)ஆகியவை.ஏ.ஐ.ஜி அமெரிக்காவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் ,இவை இரண்டும் இது போன்ற மார்டேஜ் பேக்டு செக்யூரிட்டிஸ் இல் அதிக முதலீடு செய்து ஒட்டு மொத்தமாக கவிழ்த்து விட்டார்கள்.இப்போது மூடும் சூழல் வரவே அதனை மூடக்கூடாது என அமெரிக்க அரசு 185 பில்லியன் அமெரிக்க டாலர்களை மீட்பு தொகையாக கொடுத்துள்ளது, அதில் 12.5 பில்லியன் டாலர்களை கோல்டுமென் சாஷ்க்கு ஏ.ஐ.ஜி கொடுத்தது.

கோல்டு மேன் சாஷ் நட்டம் என சொன்னாலும் அதன் ஊழியர்களின் ஆண்டு சம்பளம் மட்டுமே 30 பில்லியன் டாலர்களாக இருக்கிறது என்றால் என்ன காரணம் லாபத்தில் மிக அதிக விகிதத்தை அவர்களே அனுபவிக்க முடிவு செய்து, அவர்கள் மட்டும் தாராளமாக செலவு செய்துக்கொண்டு முதலீட்டாளர்களுக்கு கொடுக்க பணம் இல்லை என ஏமாற்றலாம் என்பதாலேயே. நிலமை மோசமானால் , மஞ்சள் கடுதாசி கொடுப்போம் என அரசை மிரட்டுகிறார்கள்.

இது ஒரு உதாரணம் தான் இது போல பல வங்கிகள், பல மஞ்சள் கடுதாசிக்கதைகள் அமெரிக்காவில் இருக்கு.இதே போல வியாபார ரீதியான செக்யூரிட்டிகளும் உண்டு, அதிலும் பலத்த நட்டமே எனவே ஒட்டு மொத்தமாக அமெரிக்க பங்கு சந்தை ஆட்டம் போடவே அமெரிக்க அரசு பல பில்லியன்களை மீட்பு தொகையாக செலவிட்டுள்ளது.



இதெல்லாம் பார்த்த அமெரிக்க பொது ஜனம் போங்கி எழுந்தது தான் வால் ஸ்ட்ரீட் முற்றுகை , அவர்களின் பொருளாதார நீதியின் கோரிக்கையே பங்கு சந்தையை மூடிவிட வேண்டும் என்பதே.

ஏன் மூடச்சொல்கிறார்கள்? ஏன் எனில் ஒரு சதவீத மக்களே பங்கு வர்த்தகத்திலும் , வியாபாரத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள், 99% மக்கள் இதற்கு வெளியில் இருக்கிறார்கள், அவர்களுக்கோ வேலை வாய்ப்பு பிரச்சினை, வீட்டுப்பிரச்சினை என ஆயிரம் பிரச்சினை இருக்கு அதனை சரி செய்ய அரசு முயலாமல் ஒரு சதவீத பங்கு சந்தை முதலீட்டாளர்களை காக்க பெருமளவு பணத்தினை செலவு செய்கிறது ,அப்பணம் 99% மக்களுக்கும் உரியதே அவர்களின் வரிப்பணம். ஆனால் அவர்களுக்கு எதுவும் இல்லை,வாழ்வோ நாளுக்கு நாள் மோசமாகிறது.

இதற்கெல்லாம் காரணம் பங்கு சந்தை இருப்பது தானே ,யாருக்கு வேண்டும் அது மூடுங்கள் என வால்ஸ்ட்ரீட் முற்றுகைக்கு திரண்டுவிட்டார்கள். அவர்கள் அனைவரும் நியுயார்க் மன்ஹாட்டன் சதுக்கம் அருகே வால்ஸ்ட்ரீட் அருகில் லிபெர்டி பார்க் என்ற இடத்தில் முகாமிட்டு தொடர்ந்து முழக்கமிட்டு வருகிறார்கள். திரைப்பட நடிகை ரோசன் பார் முதல் நாளும் பின்னர் இயக்குனர் மைக்கேல் மூர் போன்ற பிரபலங்கள் எல்லாம் நேராக வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிக்கைகளில் வந்த செய்திகட்டுரைகள், தொலைக்காட்சி செய்தியின் அடிப்படையில் வேலைவாய்ப்பின்மை, மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஒன்றுக்கூடி உருவானது தான் வால்ஸ்ட்ரீட் முற்றுகை என்பது குறிப்பிடத்தக்கது.



காவல் துறை எவ்வளவோ முயன்றும் அப்புறப்படுத்த முடியவில்லை, இதுவே நம்ம ஊரா இருந்தா காவல் துறை பின்னி பெடல் எடுத்து இருக்கும், அமெரிக்காவில் மனித உரிமைகளுக்கு நல்ல மதிப்பும், பாதுகாப்பும் உள்ளதால் எதுவும் செய்ய முடியவில்லை.

பெப்பர் ஸ்பிரே அடித்த காவல் துறை அதிகாரியை வீடியோ எடுத்து உடனே இணையத்தளத்தில் போட்டனர் .இதனால் காவல் துறையை பலரும் கண்டிக்க ,காவல் துறை பகிங்கர மன்னிப்பு கேட்டுள்ளது.இவர்கள் போராட்டத்தில் இணையம் பெரும் பங்கு வகிக்கிறது, வலைப்பதிவு, டிவீட்டர், முக நூல் என அனைத்திலும் உடனுக்குடன் பகிர்ந்துவிடுகிறார்கள். இதனால் அமெரிக்கா முழுவதும் பரவி ஆக்குபை லாஸ் ஏஞ்சல்ஸ், ஆக்குபை கலிபோர்னியா என பல குழுக்கள் உருவாகிவிட்டது.

ஆக்குபை வால்ஸ்ட்ரீட் இணையதளம்:


விக்கிப்பீடியா சுட்டி:


மேலும் அனானிமஸ் ஹேக்கர்ஸ் (anonymous hackers)என்ற குழு உருவாகி வன்முறை பிரயோகிக்கும் காவல் துறை அதிகாரிகளின் குடும்ப விவரம், உறுப்பினர்கள் புகைப்படத்தினை எல்லாம் வலைப்பதிவில் போட்டு எச்சரிக்கவும் செய்வதால் காவல் துறையினர் கதிகலங்கிப்போய் உள்ளனர்.

முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் தான் தொழிலாளர் போராட்டம் நடந்து ,மே தினம் உருவானது, அங்கு தான் இப்போது பொருளாதார நீதி வேண்டி வால்ஸ்ட்ரீட் முற்றுகையும் நடக்கிறது ,கம்யூனிசம் பேசும் நாடுகளில் கூட மக்கள் இத்தகைய எழுச்சிக்காட்டவில்லை , ஏன் இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளிலும் என்ன நடந்தாலும் என்ன செய்ய எல்லாம் அப்படித்தான் நடக்கும் என மக்கள் வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள். மற்ற நாடுகளை விட அமெரிக்க ஜனநாயகம் மக்களை சுதந்திர கருத்துக்களுடன் உருவாக்கியுள்ளது எனலாம்.

இந்தியாவிலும் பங்கு சந்தை செயல் படுவது சிலரின் நலனுக்காக தான், 99% மக்களுக்கும் அதற்கும் தொடர்பே இல்லை,ஆனால் அரசு பங்கு சந்தைக்கு காட்டும் அக்கரையை மக்களிடம் காட்டுவதேயில்லை. இதை எல்லாம் கேள்விக்கேட்டு ,பொருளாதார நீதி வேண்டும் என மும்பை பங்கு சந்தையுள்ள தலால் ஸ்ட்ரீட் முற்றுகை ஒன்று நடந்தால் நன்றாக இருக்கும், ஆனால் அதை எல்லாம் யோசிக்க கூட இங்கு பலருக்கும் தோன்றுவதே இல்லை என்பது தான் ஆச்சர்யமானது!

ஐ.பி.எல் கிரிக்கெட் இருக்கு ,மஜ்ஜாவா சினிமா இருக்கு , டீ.வி சீரியல் இருக்கு அப்புறம் என்ன பெருசா வேண்டும் ? பல ஆயிரம் கோடி ஊழல் செய்தான்னு தெரிஞ்சாலும் தியாகியா சித்தரித்து வாழ்த்தி வணங்கி போஸ்டர் ஒட்டவும் மாலைப்போடவும் தயாரா ஒரு அடிமைக்கூட்டம் இருக்கும் நாட்டில் நாமும் கூட்டத்தில் ஐக்கியமாகி குவார்ட்டர் கிடைக்குமா என பார்ப்பதே புத்திசாலித்தனம் என வாழ பழகியவர்கள் நாம் ... வேறென்ன சொல்ல ..ஜெய் ஹோ ..ஜெய் ஹோ !

பின்குறிப்பு:

#சிற் சில பிழைகள் இருக்கலாம் ,சில நினைவில் இருந்து எழுதப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டினால் திருத்தப்படும்.

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள், விக்கி, ஆக்குபை வால்ஸ்ட்ரீட், இணைய தளங்கள், நன்றி!

*****

Wednesday, May 16, 2012

2g scam-சூரியனுக்கே டார்ச் அடிச்ச ராசா வாராருங்கோ!





அலைக்கற்றை ஊழல் வழக்கு எப்படி போகுது யாருக்கு என்ன மாதிரி கோர்ட் ரியாக்ட் செய்கிறது என எல்லாம் பார்த்து விட்டு கடைசியில் ஜாமின் மனுப்போட்டு ஜம்மென வெளியில் வந்துவிட்டார் ஆண்டிமுத்து ராசா , இதற்கிடையில் அவரது உயிருக்கு சிறை தான் பாதுகாப்பான இடம் என வெளியில் வராமல் இருந்தார் என செய்திகள் கசிந்தன. இப்போது பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுவிட்டது போலும் வெளியில் வந்துவிட்டார், உண்மையில் ஊழலின் வீச்சு என்ன எனப்பார்ப்போம், அதற்கு முன்னர் தமிழகத்தில் நடைப்பெற்ற வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டில் நடைப்பெற்ற ஊழலைப்பார்ப்போம் ,அதே போன்ற செயல்ப்பாட்டில் தான் 2ஜீ ஒதுக்கீட்டிலும் ஊழல் நடைப்பெற்றது. தலைவன் காட்டிய வழியில் தொண்டன் செல்வது என்று சொல்வது இதைத்தானா?

அண்ணா நகரில் உள்ள ஒரு வீட்டு மனையின் விலை சந்தை மதிப்பில் கோடியை தாண்டி இருந்தப்போதிலும் தமிழக அரசு வீட்டுவசதி வாரியம் அரசு நிறுவனம் என்பதால் மலிவு விலையில் சுமார் 50 லட்சத்துக்கு ஒரு அரசு ஊழியருக்கு அப்போதைய முதல்வர் கலிஞரின் விருப்ப ஒதுக்கீட்டின் படி ஒதுக்கிறது.

அந்த அரசு ஊழியரிடம் 50 லட்சம் பணம் இல்லை பாவம் அப்பழுக்கற்ற ஊழியர் ஆச்சே எனவே அந்த இடத்தினை ஒரு ரியல் எஸ்டேட் காரரிடம் ஒரு கோடிக்கும் மேல் ஒரு தொகைக்கு விற்று விடுகிறார் அதில் கிடைத்த பணத்தை வீட்டுவசதி வாரியத்திற்கு செலுத்தி இடத்தைப்பதிவு செய்து கொள்கிறார்.

இடமே வாங்கவில்லை ஆனால் முன் கூட்டியே விற்று விடுகிறார் இதெல்லாம் தமிழ்நாட்டில் தான் சாத்தியம், இப்போ வீட்டு வசதி வாரியம் யாருக்கு இடத்தை விற்றது என்பது ? அரசு ஊழியருக்கா அல்லது ரியல் எஸ்டேட் அதிபருக்கா?

ரியல் எஸ்டேட் அதிபருக்கு விற்றிருந்தால் அரசுக்கு கூடுதல் பணம் கிடைத்து இருக்கும் ஆனால் அப்படி விற்க விதியில் இடமில்லை, மக்களுக்காக உருவான அமைப்பு வீட்டு வசதி வாரியம். ஆனால் ஒரு அரசு ஊழியர் பெயரில் வாங்கமாலே ஒதுக்கீடு பெற்று கைம்மாற்றப்பட்டு கூடுதல் பணம் அவருக்கு போகிறது.

ஒரு அரசு ஊழியர் வருமானத்திற்கு மீறி சொத்து வாங்க்கினாலே ஊழல் ஆகும், வாங்கியவரோ காவல் துறையில் ஆய்வாளர் பணி நிலை, எனவே 50 லட்ச வீட்டு மனையை வாங்க வழியே இல்லை ஆனால் வாங்கியதாக கணக்கும் காட்டி மேலும் உடனே விற்றும் பணம் பார்த்தாச்சு. இதுக்கு பெயர் தான் விஞ்ஞான ஊழல் என்று பெயர் போல :-))

இதில் கூத்து என்ன என்றால் 50 லட்சத்துக்கு வாங்கியதாக சொன்னால் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றம், வாங்கவில்லை , அப்படியே ரியல் எஸ்டேட் அதிபருக்கு கை மாற்றிவிட்டேன் என்றால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகும் ,அதுவும் குற்றம், எப்படிப்பார்த்தாலும் விதி முறை மீறல்,ஆனால் தைரியமாக செய்துள்ளார்கள். இப்படி கண் மூடித்தனமாக தவறு செய்யும் துணிச்சல் எங்கிருந்து வருகிறது எனத்தெரியவில்லை.

இதை எதுக்கு சொல்கிறேன் என்றால் அரசின் ஒரு பொருளை,வளத்தை குறைந்த விலைக்கு விற்க வைத்து அதிக விலைக்கு வெளிசந்தையில் விற்க துணை செல்வது ஊழலுக்கே வழி வகுக்கும், யாரும் சும்மா விலையை குறைவாக நிர்ணயம் செய்யவோ அல்லது அப்படி குறைவாக விலை நிர்ணயம் செய்ய விதி வகுக்கப்பட்ட ஒன்றை பிரதிபலன் இல்லாமல் ஒதுக்கீடு செய்யவும் மாட்டார்கள்.

சிறிய அளவில் தமிழ் நாட்டில் நடைப்பெற்ற இப்படி வாங்கி அப்படி விற்கும் வியாபார யுக்தியினை (mode of operation)பெரிய அளவில் தில்லியில் நடத்திக்காட்டி சாதனைப்புரிந்த ஒருவரை இப்போ பார்க்கலாம்...

2ஜீ அலைக்கற்றை ஒதுக்கீட்டின் ஆதி அந்தம் எல்லாம் மக்களுக்கு தெரியும் அதில் ஊழல் நடைப்பெற்ற விதம், மற்றும் நான் நிரபராதி வழக்கில் சிக்க வைக்கப்பட்டேன் என சொல்லும் நேர்மையாளார் ,கொள்கை குணக்குன்று , கழகத்தின் கொபசெ, ஆகிய ஆ.ராசா சொல்வது எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளும் படி இருக்கு எனப்பார்க்கலாம்,

2001 இல் முதலில் வருபவருக்கு முன்னுரிமைனு பி.ஜே.பி வகுத்த கொள்கை அருண் ஷோரி எல்லாம் அதன் படி செயல்ப்பட்டிருக்கிறார் நான் செயல் படக்கூடாதா என்கிறார்,

அப்படி எனில்,

#அப்போது பெட்ரோல் விலையை அரசே நிர்ணயம் செய்ய உரிமை வந்திருந்தது ஏன் ஆட்சி மாறியதும் சந்தை விலைக்கு நிர்ணயம் செய்யலாம் என எண்ணை நிறுவனங்களுக்கு உரிமை வழங்கினீர்கள் ,முன்னர் இருந்த கொள்கை முடிவின் படியே செய்திருக்கலாமே?
#அப்போது பெட்ரோல் விலை 35 ரூ இருந்தது அதே விலைக்கு இப்போதும் விற்கலாமே? பெட்ரோலை பழைய விலைக்கே விற்றால் நஷ்டம் வரும் எனில் அலைக்கற்றையை மட்டும் பழைய விலைக்கு விற்றால் நஷ்டம் வரும் என தெரியாத அப்பாவியா :-)), அட சின்ன தம்பி பிரபு விட ரொம்ப அப்பாவியா இருந்து இருக்காரே ராசா :-))

# ஒரு ஆட்சி சரி இல்லைனு தானே உங்க்களை தேர்வு செய்கிறார்கள் அப்புறம் என்ன அவங்க செய்ததையே செய்கிறோம்னு சொல்ல நீங்க எதுக்கு அதுக்கு அவங்களே ஆண்டு இருக்கலாமே?

விண்ணப்பம்ம் பெறுவதற்கான கடைசி தேதியை திடீர் என முன் கூட்டியே மாற்றி விட்டார் அதற்கு அவர் சொல்லும் காரணங்கள்,

1) முதலில் வருபவர்களே முன்னுரிமை என்ற அடிப்படையில் கொடுக்கப்படுவதால் , கடைசித்தேதியில் வரும் விண்ணப்பத்திற்கு பலன் இல்லை எனவே கடைசி தேதிக்கு முக்கியத்துவம் இல்லை என்கிறார்,

இது எவ்வாறு சரி இல்லை எனில் , முதலில் வந்த விண்ணப்பங்களில் பல தேவையான தகுதி விதிகளை பூர்த்தி செய்யவில்லை எனில் தகுதி இழக்கும் நிலையில் அடுத்துள்ள விண்ணப்பங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது, தேதியை முன் கூட்டி மாற்றியதால் பலருக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பே மறுக்கப்படுகிறது.வரையறுக்கப்பட்ட தகுதிகளை பூர்த்தி செய்யாத 85 விண்ணப்பங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.


இறுதியில் 160 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 122 க்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது ஆனால் 122 விண்ணப்பங்களையும் போட்டது 22 நிறுவனங்களே, உண்மையான எண்ணிக்கை 22 மட்டுமே மேலும் அந்த 22 என்ற எண்ணிக்கையும் உண்மையல்ல பலவும் பினாமி நிறுவனங்கள் அப்படி எனில் ,
2) குறைவான அலைக்கற்றை உள்ள நிலையில் அதிக விண்ணப்பங்கள் வந்து விட்டன ,எனவே பரிசீலிக்க கால தாமதம் ஆகும் எனவே தேதியை மாற்றினோம் என்கிறார்,ஆதுவே பொய் ஆகிறது.

அவர் சொன்னது சரியா எனப்பார்ப்போம்,

உரிமம் பெற்ற Adonis Projects, Nahan Properties, Aska Projects, Volga Properties, Azare Properties & Hudson Properties ஆகியனவற்றை வாங்கிவிடுகிறது Unitech. தொழில்நுட்ப ரீதியாக அப்படி சொல்லப்பட்டாலும் அனைத்து நிறுவனங்களும் யுனிடெக்கின் ஏற்பாட்டில் உருவானவையே.

ஐந்து விண்ணப்பத்தாரர்களின் உரிமையும் உடனடியாக யுனி டெக் வயர்லெஸுக்கு கை மாறுகிறது,அதாவது யுனிடெக்கின் பினாமி தான் அவர்கள், மொத்தமாக யுனிடெக் வசம் சென்றது 22 license,

Swan Telecom merged itself with Allianz Infratech (P) Ltd.

ஸ்வான் மற்றும் அலயன்ஸ் இரண்டும் ஒருவரே, மொத்தமாக கைப்பற்றியது 15 license,

அதே போல ஐடியா செல் , ஸ்பைஸ் உடன் இணைந்து விடுகிறது, கைப்பற்றியது 13 license,

இது போல 122 விண்ணப்பங்கள் என கணக்கு காட்டப்பட்டு 22 பேருக்கு தான் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் அதிக விண்ணப்பங்கள் வந்துவிட்டன ,பரிசிலீக்க கால தாமதம் ஆகும் என கடைசி தேதியை மாற்றினோம் என்பது அடிப்பட்டுப்போகிறது.

இப்போது எப்படி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனப்பார்ப்போம்,

1)ஸ்வான் அலை கற்றை வாங்க செலவிட்டது 1537 crores தனனு பங்கில் 45% (approximate) Etisalat of UAE க்கு Rs.3,544 கோடிகளுக்கு விற்றுவிட்டது,

45% பங்கின் மதிப்பு= 3,544 கோடி எனில்
100% மதிப்பு = 3,544*100/45
=7,875.5 கோடிகள்

அதாவது அரசிடம் இருந்து 1,537 கோடிகளுக்கு வாங்கிய அலைக்கற்றையின் உண்மையான மதிப்பு 7,875.5 கோடிகள், இதன் மூலம் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு,

7,875.5-1,537=6338.5 கோடிகள்.

2) யுனி டெக் 1,651 கோடிகளுக்கு பெற்ற அலைக்கற்றை உரிமத்தில் 60% பங்கினை நார்வேயின் டெலிநாருக்கு 6,120 கோடிகளுக்கு விற்றுவிட்டது,

60% பங்கு= 6,120 கோடிகள் எனில்

100% மதிப்பு= 6120*100/60
=10200 கோடிகள்.

யுனிடெக் பெற்ற அலைக்கற்றையின் உண்மையான மதிப்பு 10200 கோடிகள்,
அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு=10,200-1,651=8549 கோடிகள்.

இவை ஒரு உதாரணம் தான் இது போல 22 நிறுவனங்களும் 122 ,2ஜீ உரிமங்கள் மூலம் ஏற்படுத்திய மொத்த இழப்பு என மத்திய தணிக்கை துறை கணக்கிட்டது த்ஆன் 1,75,000 கோடிகள் என்பது ,இந்த தொகை மிகையானது என சிலர் சொல்லக்கூடும் ,ஆனால் எப்படிக்கணக்கு போட்டாலும் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது என்பது மேற்கண்ட உதாரணங்கள் மூலம் தெளிவாக விளங்கும்.

உலகில் நடந்த அரசியல் ஊழல்களில் டாப்-10 இல் இந்திய தொலைத்தொடர்பு ஊழலுக்கு இரண்டாவது இடத்தினை டைம் பத்திரிக்கை கொடுத்துள்ளது.


ஆ.ராசா மட்டும் இன்னும் கொஞ்ச காலம் தொலைத்தொடர்பு துறையில் இருந்திருந்தால் முதலிடம் பிடித்து சாதனைப்புரிந்து இருப்பார். அந்த மாபெரும் சாதனையை செய்ய விடாமல் சதி செய்து கெடுத்து விட்டார்கள் என மஞ்சள் துண்டு தலைவருக்கு மிகவும் வருத்தம் ,வீராணம் போல பல சாதனை திட்டங்கள் தீட்டிய மனுநீதி சோழனின் மறுப்பிறப்பான கலிஞருக்கே டைம் பத்திரிக்கையில் இடம் கிடைக்கவில்லை ஆனால் அவரது அன்பு தம்பி ,கொள்கை குணக்குன்று ராசா டைம் பத்திரிக்கையில் இடம் பிடித்து சாதனை புரிந்து சூரியனுக்கே டார்ச் அடித்துவிட்டார், அவரது சாதனையைப்பாராட்ட மனமில்லாத சிலர் திட்டம் போட்டு அவதூறு பரப்புவதாக சில கழக அல்லக்கைகள் பதிவுப்போட்டு புலம்பக்கூடும்!

மேலும் 2ஜீ ஊழலில் அதிகம் பலன் அடைந்த நிறுவனங்கள், நீதி மன்ற விசாரணையிலும் சிக்காமல் தண்ணிக்காட்டியவர்கள் ,சுப்ரமணியம் சுவாமியின் குற்றச்சாட்டின் படி ஊழலுக்கு ஒரு வகையில் துணைப்போயும் எவ்வித விசாரணைக்கும் ஆளாகாத ப.சி போன்றவற்றை நேரம் இருப்பின் பின்னர் பார்க்கலாம்.

பின் குறிப்பு:

தகவல்கள் ,படங்கள் உதவி,
விக்கி, கூகிள், எக்கனாமிக் டைம்ஸ், டைம் இணைய தளங்கள், நன்றி!

Sunday, May 13, 2012

கெரில்லா மதவாதிகள்: சாந்தியும் சமாதானமும் உலாவுவதாக!




இந்த இஸ்லாமிய பதிவர்களோடு ஒரே நகைச்சுவையப்பா ...கொஞ்ச காலத்துக்கு முன்னர் சாந்தியும் சமாதானமும் என்பதை வைத்து தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவர் என அறியப்படும் பெயரிலி ஒரு கமெண்ட் சொல்லிட்டார்னு ஏகத்துக்கும் குதிச்சாங்க ...அப்போ சாந்தி, சமாதானம் இரண்டும் ஒரே பொருள் தர வார்த்தை ஆனால் இஸ்லாமிய முகமன்னில் ஒரு முறை தான் சாந்தி(peace) என்ற பதம் வருகிறது எனவே "நடு சென்டர் "போன்று ஏன் இரண்டு முறை தமிழில் சொல்ல வேண்டும் எனவே அப்படி தமிழ்ப்படுத்துவது சரியல்ல ,அப்படி சொல்வதை மாற்றி சொன்னால் தவறும் இல்லை அது இஸ்லாமிய முகமன்னை கிண்டல் செய்வதும் ஆகாது என நான் ஒரு பதிவே போட்டேன் ,பின்ன அரபிய மூலத்தில் இல்லாத வகையில் மொழிப்பெயர்த்துக்கொண்டு அதான் இது என சொல்லிக்கொண்டால் எப்படி? எனக்கு வேலை வெட்டியில்லைப்பாருங்க அதான் சொம்பை தூக்கிட்டு வந்து அப்படி சொன்னேன் :-))


அப்போ சில இஸ்லாமிய அறிவு சீவிக்கள் ஓடி வந்து சாந்தி வேற சமாதானம் வேற எனவே இரண்டு தடவை அழுத்தம் கொடுத்து அரபு மூலத்தினை மொழிப்பெயர்க்கிறோம் எனவே அதனை கிண்டல் எல்லாம் செய்யப்படாது தமிழ்மணம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்லி அரபு நாட்டில் தடை கூடப்போட்டாங்க.

அப்புறம் ஒரு வழியா பேசி தீர்த்து ,அப்படி சொன்னது தனி நபரின் கருத்து அதற்கு கம்பெனி பொறுப்பாகாது அப்படியே யாருக்கேனும் மனம் புண்ப்பட்டிருந்தால் வருத்தங்கள் என டிப்ளமாட்டிக்கா ஒரு அறிக்கை விட்டு தமிழ்மணம் தண்ணீர் விட்டு அனைத்தது.

இந்த கண்றாவி எல்லாம் ஏற்கனவே தெரியுமே இப்போ என்னாத்துக்கு நீ கூவுற என கேட்பதும் தெரியுது மாமே.... மேட்டரே இனிமே தான்...

அதன் பின்னரும் ஓயாத அலைகளாய் மத வாத பிரதிவாதங்கள் ஓடிக்கொண்டே இருந்தது , அது தமிழ்மண மகுடத்தினை அபகரிக்கும் அல்லது ஆக்ரமிக்கும் வகையில் போய் பல கள்ள ஓட்டு கதாநாயகர்கள் உருவானார்கள் , இது சல சலப்பை உருவாக்கி அமைதியின்மைக்கு அழைப்பு விடுத்தது.

மதவாதிகள் கள்ள/நல்ல ஓட்டுக்களை கூட்டமாக போட்டு மகுடத்தினை ஆக்ரமிப்பதை நிறுத்த வேண்டும் என அனைவரும் சொன்னதால் தமிழ்மணம் ஆழ்நிலை தியானத்தில் இருந்து வெளிவந்து மகுடம்னு இருந்தா தானே சண்டை அதையே தூக்கி விடுகிறோம் என "சாலமன் தீர்ப்பை " சொல்லி இனிமேல் மதம் அல்லது மதம் சார்ந்த இடுகைகள் இடப்பட்டால் நீக்கப்படும் என பிரகடணம் செய்தது. சரி சண்டை சச்சரவு நீங்க ஏதோ ஒன்று செய்தாக வேண்டிய சூழலில் இவ்வளவு தான் செய்ய முடியும் என்பதை உணர்ந்து அனைவரும் ஆல் இஸ் வெல் சொல்லி அமைதியானார்கள்.

இதில் நடுநிலையாக மத மூட நம்பிக்கைகளை அலசும் விமர்சிக்கும் பதிவாளார்களும் பாதிக்கப்பட்டு ,இடுகைகள் நீக்கப்பட்டது அவர்களும் இடுக்கண் வருங்கால் நகுக என்பது போல சிரித்துக்கொண்டே "ஆல் இஸ் வெல் "சொல்லிக்கொண்டார்கள் :-))

மதம்னு லேபிளிலோ அல்லது தலைப்பிலோ மத வாசனை அடித்தால் இடுகை நீக்கப்பட்டது ஆனால் இப்போ பாருங்க தமிழ்மண நட்சத்திரப்பதிவுகளிலேயே பொதுவா விளக்கம் சொல்கிறார்ப்போல "சாந்தியும் சமாதானமும்" என ஒருத்தர் பதிவு போட்டு இருக்காங்க. அதில் நேரடியாக எந்த தூண்டிவிடும் வார்த்தைப்பிரயோகமும் இல்லாவிட்டாலும் ஒரு நுண்ணரசியல் இருக்கு , எந்த கருத்தை வைத்து பிரச்சினை கிளம்பியதோ அதையே நட்சத்திர வாரத்திலும் எழுதுவோம் என்ன செய்ய முடியும் என்ற ஒரு சவால் ஒளிந்திருக்கிறது மேலும் மதம் சார்ந்த இடுகைகள் நீக்கப்பட்டு வரும் வேளையில் இப்படி எழுதினால் என்ன செய்ய முடியும் என கேள்விக்குள்ளாக்குகிறது அப்பதிவு?

சொல்லலாம் இது இஸ்லாமிய முகமன்னை விளக்கும் பதிவுனு ஆனால் பல நாட்களுக்கு முன்னரே அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அலசி சாறு பிழிந்து சக்கையாகி போன சமாச்சாரம் அப்போதே அனைவரும் விளக்கம் கிளக்கம் எல்லாம் கொடுத்தாச்சு இப்போ மீண்டும் விளக்கம் தேவையா? தேவையே இல்லை ஆனால் மதவாதிகளுக்கு தேவையாய் இருக்கு :-))

மேலும் இரண்டு முறை ஒரே பொருளில் உள்ள சொல்ப்பயன்ப்படுத்தப்பட்டிருக்கு அது தவறான மொழிப்பெயர்ப்பு என சொன்னதற்கு இல்லவே இல்லை என்று வாதிட்டார்கள்,ஆனால் இப்போதைய பதிவில் ஒரே பொருள் வரும் இரண்டு சொற்கள் அவைனு ஒத்துக்கிட்டு இருக்காங்க,அப்போ தவறான மொழிப்பெயர்ப்பை பயன்ப்படுத்திக்கொண்டு அதற்கு ஒரு சண்டையிட்டது ஏன்? சண்டைப்போடனும் அதற்கு ஒரு காரணம் வேண்டும் என்றா ?

இனிமேல் இப்படியான என்கிரைப்டட் மதப்பதிவுகள் மெல்ல வரத்துவங்கும் மீண்டும் குடுமி புடி சண்டை தான் :-)) ஆனால் இதுல மாட்டிக்கிட்டு அவஸ்தைப்பட்டது தேமேனு இருந்த நடு நிலையாளர்கள் தான் .சிலர் மதவாதிகளே சண்டைப்போடாதிங்கன்னு பதிவுப்போட்டதுக்கு எல்லாம் மத பதிவுனு நீக்கப்பட்டிருக்காங்க ... பாவம் சண்டைப்போட்டுக்கிறாங்களேனு சமாதானம் செய்யப்போறேன்னு போய் மூக்கு உடைப்பட்ட வடிவேலுகள் அவங்க :-))

பின் குறிப்பு:

#மதம் சார்ந்த பதிவுகள் நீக்கப்படும் என்ற நிலையில் பல நடுநிலையாளர்கள், மூட நம்பிக்கையை விமர்சிக்கும் பதிவர்கள் ஆகியோரின் இடுகைகள் கும்பலில் கோவிந்தாவாக நீக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்று இந்நிலையில் ,மறைமுகமாக மதம் சார்ந்து பதிவுகள் இடுவதும் அதுவும் நட்சத்திரவாரத்திலும் என்ற நிலையில் இதற்கான அளவு கோள் என்ன என அறிந்துக்கொள்ளவே இப்பதிவு.

# அஹமது (அ) முகமது கூட ஆஷிக் என்பது முன்னாலோ ,பின்னாலோ ஒட்டி இருக்கும் அவர் தான் சாந்தி வேறு சொல் சமாதானம் வேறு சொல்னு சொல்லிக்கிட்டு இருந்தார் அந்த மானஸ்தர் இப்போ என்ன சொல்கிறார் என அறிய ஆவல்!

#இது மதப்பதிவு அல்ல ஆனாலும் பெயரிலி ஏதேனும் ஆங்கில கவிதை படிப்பாரா என தெரியவில்லை :-))

*****

Tuesday, May 08, 2012

கேட்கிறவன் கேணையா இருந்தா கேரம் போர்டை கண்டுப்பிடிச்சது கே.எஸ்.ரவி குமாரா?






கி.பி 1889 ஆண்டில் ஒரு வழக்கமான ஞாயிறாகத்தான் அமெரிக்கவின் லுடிங்டன் நகருக்கும் விடிந்ததிருக்க வேண்டும் ,ஆனால் அன்று அந்நகரம் உணரவில்லை ஒரு நூற்றாண்டு கழித்து இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தின் தலைநகராம் வங்கக்கடல் தரங்கம்பாடும் சிங்கார சென்னையில் இருந்து வவ்வால் எனும் நாமகரணம் கொண்ட ஒருவன் இணையத்தில் லூடிங்க்டனை தேட வைக்கும் சரித்திர புகழ்பெற்ற ஞாயிறு ஆக அமைய போகிறதென்பதை அந்நகர் அறிந்திருக்கவில்லை .ஏன் அவன் தேடினான் ... தேடலின் வரலாறு ,புவியியல் என்ன?


...கேட்கிறவன் கேணையனா இருந்தா கேரம் போர்டை கண்டுப்பிடிச்சது கேரம் கே.எஸ்.ரவிக்குமார்னு சொல்லுவியா என
" மக்கள் மகிழ்விப்பான்" சந்தானம் யாரையோ பார்த்து வெள்ளித்திரையில் கேட்டாலும் என்னைப்பார்த்து கேட்டாப்போலவே இருக்கவே தான் இந்த தேடல் துவங்கியது மிஸ்டர் கூகிள் வழிக்காட்டலுடன், அப்படி என்ன தான் தேடிக்கிடைத்தது ... வாருங்கள் காண்போம்!


லூடிங்க்டன் நகருக்கு வழக்கமான ஒரு ஞாயிறாக விடிந்தாலும் பின்னாளில் விளையாட்டு மற்றும் பொழுது போக்கு வரலாற்றின் பக்கங்களில் அழியாச்சுவட்டினை அந்நாள் பதித்தது என்றால் மிகையில்லை. விடுமுறை தினமான அந்த ஞாயிறும் வார இறுதிப்பள்ளி ஆசிரியரான ஹென்றி ஹேஸ்கலுக்கு வழக்கமாகவே போய் இருக்கும் ஆனால் அப்பள்ளியின் விளையாட்டுக்கூடத்தில் இருந்து பெரும் உற்சாக கூச்சலும் ,கும்மாளவும் வரவே மாணவர்கள் ஏன் இப்படி சத்தமிடுகிறார்கள் எனப்பார்க்க போனது ஒரு புதிய கண்டுப்பிடிப்பை உருவாக்கியது. ஹென்றி அங்கு கண்டது இது தான், ஒரு பில்லியர்ட்ஸ் டேபிளை மாணவர்கள் சூழ்ந்து நின்று கொண்டு உற்சாகமாக விளையாடிக்கொண்டு ஒருவரை இடிப்பது தள்ளுவதுமாக ,கூக்குரல் எழுப்பிகொண்டும் இருந்தார்கள்.

நம்ம ஊரு உபாத்தியாராக இருந்தால் ஏய் இங்கே என்ன சத்தம் ...வகுப்புக்கு போகாம இங்கே என்ன பண்றிங்க ..ஓடுங்க என தொறத்திவிட்டு கடமையை செய்து இருப்பார். ஆனால் அமெரிக்க உபாத்தியார் ஆச்சே ஹென்றி அப்படி எல்லாம் கட்டுப்பெட்டியாக இல்லாமல் கொஞ்ச நேரம் மாணவர்களை கூர்ந்து கவனித்தார் மாணவர்கள் முறை வைத்து வரிசையாக அடங்கா ஆர்வத்துடன் குதுகளமாக ஆடிக்கொண்டு இருந்தார்கள். எத்தனையோ கேம்கள் இருக்க பில்லியர்ட்ஸ் மீது ஏன் இத்தனை ஆர்வம் என யோசிக்கலானார்.



காரணம் அறிந்தார்... என்னவெனில் பில்லியர்ட்ஸ் டேபிள் விலை அதிகமானது அனைவர் வீட்டிலும் வாங்கி வைத்து விளையாட முடியாது,மேலும் அதிக இடமும் அடைக்கும் , எனவே பெரும்பாலான மாணவர்கள் பள்ளியில் இருக்கும் டேபிளை பெரிதும் விரும்பி பயன்ப்படுத்திக்கொண்டார்கள்,மேலும் அதிகம் ஓடி ஆடாமல் உள்ளரங்கிலேயே ஆடினாலும் விறு விறுப்பாக ஆடக்கூடிய குழு விளையாட்டாகவும் இருந்தது.


பில்லியர்ட்ஸ் போன்ற ஒரு விளையாட்டு ஆனால் கையடக்கமாக, மலிவாக அனைவருக்கும் வாங்கும் விலையில் வேறு விளையாட்டுகள் எதுவும் இல்லை என்பதை உணர்ந்தார், இல்லை என்றால் என்ன நாம் உருவாக்குவோம் என யோசித்து பில்லியர்ட்சையே கொஞ்சம் மாற்றம் செய்து சிறிய வடிவில் ஒரு விளையாட்டு பலகையை உருவாக்கினார் அதற்கு கேரம் எனவும் பெயரிட்டார் , ஆம் கேரம் போர்டை கண்டுப்பிடித்தவர் ஹென்றி ஹேஸ்கல்(Henry Haskell)என்ற பள்ளி ஆசிரியரே.

பல நாடுகளிலும் கேரம் போர்ட்டு போன்ற விளையாட்டுக்கள் இருந்திருக்கலாம் ஆனால் கேரம் போர்ட் எனப்பெயர் வைத்து அமெரிக்காவில் முதன் முதலில் காப்புரிமை பெற்றவர் இவர் ஒருவரே ,எனவே அதிகாரப்பூர்வமாக அதன் கண்டுப்பிடிப்பாளர் என அறியப்படுவது ஹென்றி ஹேஸ்கல் ஆகும்.

கேரம் போர்ட் உற்பத்தி செய்ய அவரது நண்பருடன் சேர்ந்து லூடிங்க்டன் நாவல்டி ஒர்க்ஸ் என்ற தொழிற்சாலையை கிபி 1890 இல் அமைத்தார்.பின்னர் 1900 இல் அர்ச்சரேனா என்ற நிறுவனத்துடன் இணைந்து கேரம் அர்ச்சரேனா கம்பெனி என மாற்றியமைத்தார்.

பின்னர் பல கூட்டணிகள், மாற்றங்கள் என கண்டு கி.பி 1939 இல் கேரம் இண்டஸ்ட்ரிஸ் என பெயரும் மாறியது. 1940 இல் நிறுவனரான ஹென்றி ஹேஸ்கல் காலமானார். அதன் பின்னர் சொப்பன சுந்தரியின் கார் போல பல கைகள் மாறி கி.பி 1980 இல் லைட்னிங் குருப் எனும் கம்பெனியின் வசம் சேர்ந்தது அது 1996 வரைக்கும் நடத்தியது,பின்னர் கம்பெனி நலிவடைந்ததால் செயல்ப்பாட்டினை நிறுத்திக்கொண்டது. இன்று வரையில் "Carrom" என்ற பெயரின் காப்புரிமை அவர்களிடமே உள்ளது மற்றவர்கள் அப்பெயரினை பயன்ப்படுத்த முடியாது. ஹி..ஹி ஆனால் நான் கேரம் போர்டை பயன்ப்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது :-))

பிட்டுகள்:

# கேரம் என்ற சொல் கேனான்(பீரங்கி) இல் இருந்து உருவானது ,அதன் பொருள் ஷாட் -அடி என்பதாகும். ஸ்ட்ரைக்கர் வைத்து அடித்து தானே விளையாடுகிறோம்.

# கேரம் போன்ற விளையாட்டு உலகின் பல நாடுகளிலும் ,பல பெயர்களிலும் விளையாடப்பட்டே வருகிறது. பல நாடுகளில் கை விரல்களுக்கு பதில் கியுஸ் எனப்படும் ஒரு சிறு குச்சியினை பில்லியர்ட்ஸ் போலவே பயன்ப்படுத்துவதுண்டு.

சில நாடுகளில் புழங்கும் பெயர்கள்:

டென்மார்க்-கெரொமா

சீனா -கேரம்

ஃபிஜி- வின்டி வின்டி

கனடா -குரோக்கியோல்

இஸ்ரேல்- ஷே-ஷே

மெக்சிகோ- காயின்களுக்கு பதில் சோடா மூடியுடன் ஆடப்படுகிறது.

# 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அபிசினியாவில் (இன்றைய எத்தியோப்பியா)இதே போன்ற விளையாட்டு இருந்ததாக ஒரு கல்லரை ஓவியம் காட்டுகிறது.

#அக்காலத்தில் போர்த்து கீசியர்கள் கேரம் என்றே கேரளாவை அழைத்துள்ளார்கள்.எனவே இந்தியாவில் கேரளவில் இருந்து கூட தோன்றி இருக்கலாம்.பெரும்பாலோர் சொல்வது,இந்திய,இரான் பகுதிகளில் தோன்றி இருக்கக்கூடும் என்பதே.

#கேரம் விளையாட்டில் இந்தியா தான் முன்னணியில் உள்ளது பல உலக சாம்பியன்களை உருவாக்கியுள்ளது அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இருந்து பல சேம்பியன்கள் உருவாகியுள்ளார்கள்.ஒலிம்பிக் போன்ற விளையாட்டு அமைப்புகளால் கேரம் இன்னும் ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்படவில்லை. ஒரு பொழுபோக்கு விளையாட்டு என்ற அளவிலே சர்வதேச அங்கீகாரம் இல்லாமல் விளையாடப்பட்டு வருகிறது.




#தமிழகத்தினை சேர்ந்த மரிய இருதயம் இரு முறை ஒற்றையர் உலக சேம்பியனாகவும் ,இரு முறை இரட்டையர் சேம்பியனாகவும் சாதனைப்புரிந்துள்ளார், ஒன்பது முறை தேசிய சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். மேலும் அர்ஜுனா விருதுப்பெற்ற ஒரே கேரம் வீரர் ஆவார்.

#பி.ஆரோக்கிய ராஜ் ,தமிழ் நாடு , மரிய இருதயத்துடன் சேர்ந்து இரட்டையர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இது போன்று ஆர்.நட்ராஜ்,ராதாகிருஷ்ணன் என பல கேரம் சாம்பியன்கள் தமிழகத்தில் உள்ளார்கள்.

#பெண்களில் ஜீ.ரேவதி,பி.நிர்மலா போன்ற குறிப்பிட தகுந்த கேரம் வீராங்கனைகள் தமிழகத்தில் உள்ளனர்.

# மற்ற நாட்டில் கேரம் போல விளையாட்டு இருந்தாலும் அமெரிக்காகாரன் தான் பேரு வச்சு அதுக்கு காப்புரிமை வாங்கி வைப்பாங்க ,மஞ்சள், வேம்பு, பாஸ்மதி அரிசிக்கு எல்லாம் காப்புரிமை வாங்கியது போல,சும்மா சொல்லக்கூடாது மூளைக்காரன்ங்கய்யா :-))

பின் குறிப்பு:

படங்கள் மற்றும் தகவல் உதவி:

http://www.bestqualitytoys.com

http://www.international-carrom-fed-media-commission.org/

மற்றும் கூகிள், விக்கி நன்றி!

Tuesday, May 01, 2012

INTERACTIVE LEARNING or DISCUSSION





ஒரு கருத்து பரிமாற்றத்தில் ஒருவர்  கருத்து வழங்குபவராகவும் மற்றவர்களும் பெறுபவர்களாக அதாவது கேட்பவர்களாகவும் இருப்பது மரபுவழி கருத்துரையாடல் அதே சமத்தில் கருத்துரைஞர் தானே பேசிக்கொண்டிராமல் பார்வையாளர்களிடம் கேள்விகள் கேட்டுப் பதில் பெற்று அதன் மீது விரிவான விளக்கம் அளிப்பது மேலும்  பார்வையாளர்களை கேள்விக்கேட்க தூண்டி அதனடிப்படையில் விளக்கங்களை அளிப்பதும் பங்கேற்பு கற்றல் மற்றும் கலந்துரையாடல்  (INTERACTIVE LEARNING or DISCUSSION)எனப்படும் இது தான் தற்போதைய புதிய தலைமுறைக்கற்றல் ஆகும்.

பாரம்பரியமாக நமது கல்விக்கூடங்களில் ஆசிரியர் அவர்ப்பாட்டுக்கு பாடம் சொல்லிப்போவார் மாணவர்கள் கேட்பது ஒன்றே கடமையாக அமர்ந்திருப்பார்கள் ,கேள்விகளோ ,விளக்கங்களோ கேட்டால் அதிக பிரசங்கி ,போன மாதத்தேர்வில் என்ன மார்க் வாங்கின, என்ன ரேங்க் வாங்கின , பேச்சுக்கு மட்டும் குறையில்லை உட்காரு என்று மண்டையில் குட்டுவார்கள். அப்படித்தான் பதிவுகளும் இருக்கு யாரேனும் எழுதுவார் படிப்பவர்கள் நல்லப்பகிர்வு என்று தலையாட்டுவார்கள் ,அதற்கு கருத்துரையாடல் செய்ய முற்பட்டால் உனக்கு எல்லாம் தெரியுமா என ஏவுகணை விடுவார்கள்.

இது போன்ற ஒரு தலைப்பட்சமான கருத்து பரிமாற்றங்களை மாற்ற உத்தேசித்து புரட்சிகரமான ஒரு பதிவினை "INTERACTIVE LEARNING or DISCUSSION" ஆக ஒரு பதிவிட்டேன் அதற்கு பின்னூட்ட பதிவு எனவும் நாமகரணம் சூட்டினேன். ஆனால் மக்களுக்கு INTERACTIVE LEARNING or DISCUSSION என்பதில் இன்னும் சற்று குழப்பம் இருக்கிறது என நினைக்கிறேன் எனவே தெளிவாக விளக்க முனைவர் கவுண்டமணி .டாக்டர் ஆப் சிரிப்பாலஜி அவர்களை கவுரவ விரிவுரையாளராக அழைத்துள்ளேன் அவரது காணொளி மூலம் பங்கேற்பு கற்றல் மற்றும் கலந்துரையாடலின்  முழு பரிமாணத்தினையும் விளக்குவார் அதனைக் கண்டு களியுங்கள்!

பங்கேற்பு கற்றல்(அ) கலந்துரையாடல் விளக்கப்படம்:



தமிழ் சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட எப்படி எல்லாம் பாடுபடுகிறான் இந்த வவ்வால் என இன்று யாரும் நினைத்துப்பார்க்காமல்  இருக்கலாம் ஆனால் நாளைய சரித்திரம் சொல்லும் "அன்றே வவ்வால் என்றொரு வல்லவன், நல்லவன்" சொன்னான் என"

ஹி...ஹி இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை நீ எல்லாம் வல்லவன்,நல்லவானா இதெல்லாம் "கொளுத்துற வெயிலில்  கொரங்கு குல்லா போட்டுக்கிட்டு எவனாவது சூடான டீயா ஊதி ...ஊதிக்குடிச்சுக்கிட்டு இருப்பான்" அவன்க்கிட்டே போய் சொல்லு நம்புவான் ,இங்கே வேணாம் தம்பின்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது ...ச்சும்மா தமாசு :-))

பின்குறிப்பு: 

#நாம என்ன தான்  விஞ்ஞான ,தத்துவ கருத்து சொன்னாலும் எல்லாத்தையும் கேட்டுவிட்டு கடைசியில் வாழைப்பழ காமெடி ஆக்கிடுவாங்க மக்கள் :-))

#படங்கள்,காணொளி கூகிள்,யுடுயுப் ,நன்றி!

*************

may day-1,occupy wall street,social justice, financial justice,என்ன இணைப்பு?




என்னமோ பெருசா சொல்லப்போரேன்னு யாராவது ஓடி வந்தால் அதுக்கு நான் பொறுப்பல்ல, என்ன இணைப்பு என்று அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டும் என யாருக்காவது மனசுல அரிச்சா பின்னூட்டத்தில கேளுங்க பதிலா சொல்கிறேன், ஹி..ஹி... பதிவு போட்டுவிட்டு பின்னூட்டம் வருமா என எல்லாம் காத்திருப்பாங்க எத்தனை நாளுக்கு தான் அதே பாணில பதிவு போடுறது ,எனவே பின்னூட்டம் வந்தா பதிவு வரும் அதாவது பதிவுக்கு பின்னூட்டம் இல்லை இங்கே பின்னூட்டத்திற்கு பதிவு போடப்படும் :-))

யாருக்காவது கோவம் பொத்துக்கிட்டு வந்தா மேல போட்டு இருக்க படத்த ஒரு 5 நிமிடம் உத்து பாருங்க கூலாகிடுவிங்க :-))

Monday, April 30, 2012

காங் மக்களவை உறுப்பினரின் விஷம பேட்டி!



புலம் பெயர் தமிழர்கள்தான் பிரச்சினை தீர்வதை விரும்பவில்லை-காங் எம்.பி, மாணிக் தாகூர் பேட்டி!

இலங்கை சென்று வந்த குழுவில் இடம்ப்பெற்றிருந்த எம்.பிக்களில் ஒருவரான விருதுநகர் காங்கிரஸ் எம்.பி ,மாணிக் தாகூரிடம் குமுதம் ரிப்போர்ட்டர் (3-05-2012)எடுத்த பேட்டியில் தான் அப்படி சொல்லி இருக்கிறார், ஆஹா காங்கிரஸ் இப்படி ஒரு குழுவை அனுப்பியதே இது போல கதைகளை அவிழ்த்து விடத்தானா? இது தெரிஞ்சு தான் அம்மையாரும் பின் கடைசி நேரத்தில் அய்யாவும் கழண்டுக்கொண்டார்களா என நினைக்க தோன்றுகிறது.

ஏன் எனில் காங்கிரஸ் போதைக்கு தமிழக கட்சிகளும் ஊறுகாயாக தான் இத்தனை நாளும் இருந்து வருகிறார்கள் ஆனால் இம்முறை என்னமோ சூதனமாக ஒதுங்கிக்கொண்டார்கள்.

மேலும் அப்பேட்டியில் இலங்கை அரசுக்கு புனரமைப்பு செய்ய இது வரையில் 25 ஆயிரம் கோடிகள் வழங்கப்பட்டுள்ளது என்று சொல்லி இருக்கிறார் அடப்பாவிகளா அவ்வளவு பெரிய தொகையை கொடுத்ததை பற்றி ஏன் பாராளுமன்றத்தில் பேசவே இல்லை ரகசியமாக கொடுத்தார்களா? மேலும் இந்த மத்திய பட்ஜெட்டில் இலங்கைக்கு 580 கோடிகள் கொடுத்ததாக குறிப்பிட்டு இருந்ததை சுட்டிக்காட்டி இதெல்லாம் ஏன் எம்.பிக்கள் விவாதிப்பதே இல்லை என எனது பட்ஜெட் பம்மாத்து என்ற பதிவில் சுட்டிக்கேட்டு இருந்தேன்.

அதாவது சிறிய தொகையாகத்தான் ஒவ்வொரு பட்ஜெட் அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது ஆனால் இவரோ 25 ஆயிரம் கோடி என்கிறார் அப்படியானால் பட்ஜெட்டில் சொல்லாமல் இரகசியமாக பணம் கொடுத்து வருகிறார்கள் என்று ஆகிறது ,சிலர்  இப்படி சொல்லலாம் ஆண்டு தோறும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்த தொகையாக இருக்கலாம் என்று ஆனால் 2009 இல் தான் போர் உக்கிரமாகி முடிந்தது புனரமைப்பு எல்லாம் பின்னர் துவங்கியது அப்படி எனில் இந்த மூன்று ஆண்டுகளில் கொடுத்த தொகை என்றல்லவா ஆகிறது.

பட்ஜெட் அறிக்கை உண்மை என்றால் காங்.எம்பி சொன்ன தொகை பொய்யானது அவர் காங்கிரஸ் அரசு புனரமைப்புக்கு நிதிக்கொடுத்தது என்பதை பெரிது படுத்த சொன்னதாகிறது. எம்.பி சொன்னது உண்மை எனில் மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையில் பொய் சொல்லி நாடாளுமன்றத்தையும் மக்களையும் ஏமாற்றியதாக ஆகிறது. ஏன் எனில் ஆண்டுக்கு 500 கோடி என கொடுத்தால் 25 ஆயிரம் கோடி உதவி தொகை கொடுக்க 50 ஆண்டுகள் ஆகும். எது உண்மையோ தெரியாது இவர்களை நம்பிய மக்கள் காலங்காலமாக ஏமாற்றப்பட்டு வருவது மட்டுமே கலப்படமில்லாத அக்மார்க் உண்மை :-))

இந்திய மக்களின் வரி வருவாயை இஷ்டம் போல செலவு செய்துள்ளது தெரிகிறது, அட புனரமைப்புக்கு தானே கொடுத்து இருக்கு காங்கிரஸ் அதை போய் குறை சொல்லலாமா என்றெல்லாம் அல்லக்கைகள் கேட்கலாம் அடப்பதருகளா இலங்கையில் என்ன புனரமைப்பு செய்து இருக்காங்க அப்போ அதையாவது காட்டுங்க, அந்த எம்.பியே சொல்லி இருக்கிறார் இது வரைக்கும் அங்கே 500 வீடு தான் கட்டிக்கொடுத்து இருக்காங்க அதை ஏன் எனக்கேட்டு விட்டு வந்திருக்கிறோம்னு என்ன கொடுமை சார் இது 25 ஆயிரம் கோடி பணம் வாங்கி அதில் 500 வீடு தான் கட்டி இருக்கு இலங்கை அரசு அப்போ மீதிப்பணம் என்னாச்சு? அதை எல்லாம் ஏன் கேட்க மாட்டேன்கிறார்கள் யாரும்?

மேலும் சொல்லுகிறார் இனிமேல் கொடுக்கும் உதவிப்பணத்தை மக்களுக்கே நேரடியாக காங்கிரஸ் அரசு கொடுக்குமாம் அதான் எக்கச்சக்கமாக ராசபக்சேவுக்கு கொடுத்துட்டிங்களே அது என்னாச்சு என கேட்காமல் இனிமேல் கொடுப்போம் என்றால் இது வரைக்கும் கொடுத்தப்பணம் கோவிந்தா ஆச்சு அதைப்பற்றி ஒன்றும் கேட்கவோ செய்யவோ முடியாது என்று ஒப்புக்கொள்வது போல அல்லவா இருக்கு?

இந்தியா கொடுத்த 25 ஆயிரம் கோடி பணம் இலங்கை அரசுக்கு இராணுவ செலவுகளுக்கு தான் பயன்ப்பட்டிருக்க வேண்டும் , நம் நாட்டிடம் பணம் வாங்கி நமது உறவுகளை அழித்து இருக்கிறது இலங்கை அந்த உண்மையை போகிறப்போக்கில் மறைத்து விட்டு அரசியல் செய்கிறது மத்திய அரசு இவர்களை நம்பி ஆட்சியில் உட்கார வைத்தால் என்னவெல்லாம் செய்கிறார்கள் .

7.2 கோடி மக்கள் தொகை உள்ள தமிழ் நாட்டுக்கு பட்ஜெட் போடவே சுமார் ஒரு லட்சம் கோடி போதும் அப்படி இருக்கும் போது சுமார் 20 லட்சம் தமிழ் மக்களுக்கு புனரம்மைப்பு செய்ய இலங்கைக்கு 25 ஆயிரம் கோடி கொடுத்தால் என்னவெல்லாம் செய்திருக்கலாம் ஆனால் 500 வீடுகள் தான் கட்டி இருக்கிறார்கள் என அவர்கள் சொன்னதைக்கேட்டுவிட்டு அப்படியே வர எதற்கு ஒரு குழு ,ஏன் இந்தியா தான் கொடுத்த தொகைக்கு கணக்கு கேட்க கூடாது?

20 லட்சம் மக்களுக்கு தலா நபருக்கு 125000 என 25 ஆயிரம் கோடியை பிரித்துக்கொடுக்க முடியும் அப்படி கொடுத்திருந்தால் அவர்களே சொந்தமாக ஏதேனும் செய்திருப்பார்கள் .ஆனால் எதுவுமே உருப்படியாக நடக்காமல் ராச பக்சேவுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய்  மொய் எழுதிவிட்டார்கள்! உலகிலேயே மிக பெரிய மொய் இதுவாக்க தான் இருக்கும் :-))

கேட்கலாம் ஆனால் காங்கிரஸ் அரசு கேட்காது ஏன் எனில் கொடுக்கும் போதே இராச பக்சே பணத்தை வாங்கி என்ன செய்வார் என தெரிந்தே தானே கொடுத்தது இன அழித்தொழிப்புக்கு ஒரு ஜனநாயக நாடே பண உதவி செய்திருக்கிறது ஆனால் அதற்கு பெயர் புனரமைப்பு நிதி. இதை எல்லாம் ஏன் தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டு வரவில்லை, இலங்கை பிரசினைக்காக ,தமிழர்களுக்காக கூட பேச வேண்டாம் ,இந்திய மக்களின் பணம் இப்படி அநியாயமாக செலவு ஆகி இருப்பதை கூடவா கேட்க கூடாது? எல்லா எம்.பிக்களுக்குமே கேள்விக்கேட்க உரிமை இருக்கிறது, ஏன் அது கடமையும் கூட அரசு ஒழுங்காக செயல் படுகிறதா எனக்கண்காணிக்க , கேள்விக்கேட்க தானே மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்து அனுப்புகிறார்கள்.

 தமிழகத்தினை சேர்ந்த காங்  எம்.பி ஒருவர்  காங்கிரஸ் அரசு செய்ததை ஒப்புதல் வாக்குமூலம் போல அறிந்தோ அறியாமலோ சொல்லி ஒப்புக்கொள்கிறார், மேலும் புலம் பெயர் தமிழர்கள் தான் இலங்கையில் அமைதி ஏற்படாமல் தடுக்கிறார்கள் என விஷமத்தனமாக பேட்டிக்கொடுக்கிறார் ,ஆனால் இதனை தமிழக ஈழ ஆதரவு அரசியல்கட்சிகளும் பெரிதாக கண்டுக்கொண்டார் போல தெரியவில்லை, பதிவுலக அறிவு ஜீவிகள் ,இனமான காவலர்கள் எது எதுக்கோ அறச்சீற்றம் காட்டி பொங்கி பொங்கி பதிவ போடுபவர்கள் இதற்கு  பெரிதாக ரியாக்ட் செய்தார் போல தெரியவில்லை. என்ன கொடுமை சார் இது!

Wednesday, April 25, 2012

மின்வெட்டு குறையும்!





கடந்த ஆட்சியில் அறிவிப்புடன் சில மணி நேரங்களும் அறிவிப்பில்லாமல் பல மணி நேரங்களும் மின்வெட்டு போட்டு தாக்கியது விளைவு "வரும் பொது தேர்தலில் கழகம் தோல்வியடைந்தால் அதற்கு காரணம் மின்வெட்டாகவும் இருக்கலாம்" என அப்போது மின்வெட்டு அமைச்சர் என அறியப்பெற்ற ஆர்க்காட்டாரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் ஒரு 1000 மெ.வாட் மின் உற்பத்தி திட்டம் கூட செயல்ப்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.பல திட்டங்கள் வெற்றறிவிப்பாகவும், சில பேரங்கள் படிந்த பின் துவங்கப்பட்டு மந்தகதியில் நடைப்பெற்றன. அதிகரித்து வரும் மின் வெட்டினை சமாளிக்க வெளிசந்தையில் வாங்கியும், மத்திய அரசுடன் இருந்த உறவைப்பயன்ப்படுத்தி அவ்வப்போது மத்திய மின் தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் பெற்றும் கூடுமானவரை மின்வெட்டை சமாளித்து ஐந்து ஆண்டுக்காலத்தினை தள்ளிவிட்டனர்.

ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டினை  நொடியில் தீர்ப்பேன் என வரம் கொடுக்கும் மகாசக்தியைபோல் அருள் வாக்கு கொடுத்தே பொது தேர்தலில் அம்மையாரும் அமோக வெற்றிப்பெற்றார், அனேகமாக உள்ளூக்குள் அப்போது ஐயா மந்திரப்புன்னகை புரிந்து இருப்பார், இந்தம்மா எப்படித்தான் மின் வெட்டினை தீர்க்கிறது பார்ப்போமே என்று.

ஆட்சிப்பொறுப்பேற்றதும் அதிகாரிகளை கூட்டி கூட்டம் போடும் போது தான் உண்மையான நிலையே தெரிய வருகிறது ,மின்வாரியத்துக்கு சுமார் 50000 கோடி கடன்,அதில் 10000 கோடி ரூபாய் கடன் மின்சாரத்தினை வெளி சந்தையில் வாங்கிய வகையில் நிலுவை என.

புதிதாக மின்சாரம் வாங்க வேண்டும் எனில் பழைய கடன் தொகையை கேட்கிறார்கள், மத்திய  மின் தொகுப்பில்  கூடுதல் மின்சாரம் கேட்டால் கூடன்குளத்தில் தமிழகரசு எதிர் நிலைப்பாடு எடுத்திருந்ததால் கண்டுக்கொள்ளவில்லை.

அந்த சமயத்தில் காற்று வீசும் பருவமும் டிசம்பருடன் முடிய துவங்கியது எனவே காற்றாலை மின்சாரத்தின் அளவும் வெகுவாக குறைய ஆரம்பித்தது விளைவு மின்வெட்டின் கடுமை கூடத்தொடங்கியது.

என்ன செய்யலாம் என மெத்தப்படித்த அதிகாரிகளைக்கூட்டி வைத்துக்கேட்டால் வழக்கம் போல கஜானா காலி ,மின் கட்டணத்தினை உயர்த்தினால் மட்டுமே வருமானம் கிடைக்கும் அதை வைத்து மின்சாரம் வாங்கி சமாளிக்கலாம் என அபூர்வமான அறிவுரை தந்தனர்.

இப்போது தான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்,இடைத்தேர்தல் வேற ஒன்னு வருது இப்போ கட்டணத்தை பல மடங்கு கூட்டினால் மக்கள் கடுப்பாகிடுவார்கள், கடும் தோல்விக்கு பிறகு பொட்டு வச்சுக்கிட்டு பொங்கல் சாப்பிட்டுக்கிட்டு இருக்க எதிர்க்கட்சிகளூம் துள்ளிக்குதித்து போராட்டத்தை நடத்தி மீண்டும் இழந்த மக்கள் செல்வாக்கை அடையப்பார்ப்பாங்க, எனவே வேற எதாவது செய்யணும் என இராசதந்திரமாக யோசித்து , மின்வெட்டு 4 மணியோ 10 மணி நேரமோ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அறிவிச்சுக்கோங்க, மக்கள் ஏன் இந்த மின்வெட்டு எனக்கேட்டால் மின்வாரியக்கடன் கதையையும் கடந்த ஆட்சியின் அவலத்தையும் சொல்லி காசு இல்லை என சொல்லிவிடலாம் அப்படியே சைடுல மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணம் உயர்த்த  ஆலோசிப்பதாக ஒரு அறிக்கையும் விட்டு வச்சுட்டோம்னா நம்ம "ஆபரேஷனை" வெற்றிகரமாக நடத்தி முடிச்சுடலாம் என முடிவுக்கு வருகிறார்கள்.

"ஆப்பரேஷன்" என சொன்னார்களே என்ன என்று புரியவில்லையா, மின் கட்டணம் உயர்த்தினால் எதிர்ப்பு கிளம்பும், உயர்த்தாமல் அரசின் கையிருப்பு பணத்தினைக்கொண்டு மின்சாரம் வாங்கிக்கொடுத்தால் பின்னர் அதிகமாக மின் கட்டணம் உயர்த்தினால் ஏன் இந்த அளவு உயர்த்தணும் கேட்பார்கள்.அதே சமயம் கடுமையான மின்வெட்டினை செய்தோம் எனில் மின்சாரம் இல்லாமல் கஷ்டப்படும் மக்கள் ஒரு கட்டத்தில் தாங்களாகவே முன் வந்து நீங்க கட்டணம் எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக்கோன்ங்க ஆனால் தடையில்லாமல் அல்லது குறைவான மின் வெட்டுடன் மின்சாரம் கொடுத்தா போதும் கோடி புண்ணியம் நீங்க ந்ல்ல்லாயிருப்பிங்கனு கதற ஆரம்பிச்சுடுவாங்க.அரசியல் நாடக மேடையில் ...அ நாடகமே அரசியல்தான் :-))

நாம அந்த நேரம் பார்த்து மானாவாரியா மின் கட்டணம் உயர்த்திக்கலாம்,மக்கள் எதிர்ப்பே காட்ட மாட்டாங்க, அதே நேரம் எதிர்க்கட்சிகள் உத்தம அவதாரம் எடுத்து இது வரலாறுக்காணாத மின் கட்டண உயர்வு இதற்கு தானா ஆசைப்பட்டாய் தமிழினமே சற்றே சிந்தித்துப்பார் கழக ஆட்சியின் மேண்மைகளைனு  அறிக்கை விட்டால் 50000 ஆயிரம் கோடிக்கடன் சுமை அதில் 10000 கோடி மின் சாரம் வாங்கியது என தேதி,கிழமை ,தொகை வாரியா 100 பக்க அறிக்கை விட்டு பிரஸ் மீட் வச்சு பேசினோம்னா சும்ம அல்லு சில்லு அலறும்ல ஏன்னா நாம பேசுறது ஃபேக்ட்டு ...ஃபேக்ட்டு ... ஃபேக்ட்டு என அம்மையார் அமர்க்களமாக இராசதந்திர ஆபரேஷனை விளக்கவே அமைச்சர் பெருமக்கள் எல்லாம் பக்தி பரவசமாகி அம்மானா சும்மா இல்லைடா என பாடி மெய்சிலிர்க்கிறார்கள்.

FACTU..FACTU...FACTU...

"Last year, we purchased 1,500MW of electricity from private players at high prices and somehow managed the situation. But this time, we are not able to buy as we still owe 10,000 crore to suppliers," said the power manager.

மேலும் இப்போது மீண்டும் காற்று வீசும் பருவம் துவங்கிவிட்டது எனவே மீண்டும் காற்றாலை மின்சாரம் கிடைக்க ஆரம்பித்துவிடும்  கூடவே அரசியல் காற்றும் அம்மையாருக்கு சாதகமாக வீச ஆரம்பித்து விட்டது, கூடங்குளத்தில் ஆதரவான நிலைப்பாடு எடுத்ததால் டில்லி அன்னையும் நட்பாக பார்க்க துவங்கிவிட்டார், இப்போது ஜனாதிபதி தேர்தல் அடுத்து மக்களவைத்தேர்தல் என வரிசைக்கட்டி வருகிறது செல்வாக்கு இழந்து விட்ட திமுகவை அதற்கெல்லாம் நம்பினால் மீண்டும் ஒரு முறை மூக்குடைப்பட நேரிடலாம் என பல அரசியல் கணக்குகள் போட்டு அவ்வப்போது அம்மையாருக்கு சமரச செண்டு அனுப்பிக்கொண்டு இருக்கிறார் டில்லி அன்னை, அது போல ஒரு சமரச செண்டு தான் ஜெய்ராம் ரமேஷ் அனுப்பிய பாராட்டு மடல் அல்லது மெடல் கூடவே கேட்காமலே வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு 100 கோடி கூடுதல் நிதி என பச்சை விளக்கு எரிய விட ஆரம்பிச்சுட்டாங்க.

இப்போ மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் கேட்டாலும் கிடைக்கும் சூழல், வெளி சந்தையில் மின்சாரம் வாங்கவும் நிதி கிடைத்து விட்டது, காற்றாலைகளும் உற்பத்திக்கு தயாராகிவிட்டது எனவே இன்னும் சில நாட்களில் படிப்படியாக மின்வெட்டு குறைய ஆரம்பித்து விடும், முற்றிலும் மின் வெட்டு நீங்கிவிடும் என சொல்ல முடியாது ஆனால் 10 மணி நேர மின் வெட்டு இருக்காது பெரும்பாலும் 2-3 மணி நேர மின்வெட்டாக குறைய வாய்ப்புள்ளது.

அரசியல் வானிலை அய்யாவுக்கு சாதகமில்லாமல் போவது பெரிய பின்னடைவு தான் , இப்படியே மின்வெட்டு தொடர்ந்தால் மக்களவை தேர்தலில் அதையே பெரிய பிரச்சாரம் ஆக்கி சட்ட சபை தேர்தலில் விட்டதைப்பிடிக்கலாம் என ஒரு கணக்குப்போட்டு காத்திருக்கையில் இப்படி வெகு சீக்கிரம் மின்வெட்டு பிரச்சினை தீர்ந்தால் ஏமாற்றமாக இல்லாமல் என்ன செய்யும்.

இப்பவும் அரசியல் செய்ய ஒரு வாய்ப்பு இருக்கு மின்வெட்டினைக்கண்டித்து மாபெரும் உண்ணா நிலை போராட்டம் மே-1 இல் நடத்தப்போவதாக அறிவிச்சுடுங்க, வழக்கம் போல காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் உண்ணா நிலை போரட்டம் இருந்துக்கலாம், எப்படியும் இன்னும் சில நாட்களில் மின்வெட்டு தானா குறையத்தான் போகுது அதுக்கு காரணம் நான் உண்ணா நிலை போராட்டம் நடத்தியதனால் தான் என சொல்லிக்கலாம் எப்பூடி :-))

பின்குறிப்பு:

நாம் இரண்டு கழகங்களின் அரசியலையுமே விமர்சிக்கிறோம், எனவே சரியாக பதிவின் உள்ளடக்கத்தினை சரியாக உள்வாங்காமல் அரசியல் சாயம் பூசி விளையாட நினைப்போருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் :-))